Monday, May 4, 2015

தாலாட்டு‍

ஆராரிரா ஆராரோ ஆராரோ
என்றன் கண் நீயல்லவா
தூங்கு‍ பெண்ணே கண் மூடி
நான் இருக்கிறேன் உன் அருகே
ஆராரிரா ஆராரோ ஆராரோ
என் மடி உனக்காகவே
என் இனிய மணிப் பெண்ணே
உன் இனிய தூக்கதில்
நான் தூங்கிப் போவேனே என் அமுதே
ஆராரிரா ஆராரோ ஆராரோ
நிலவுப் பெண்ணே
கவலை மறந்து‍ தூங்கு‍
என் மடி உனக்காகவே
ஆராரிரா ஆராரோ ஆராரோ
என் கைகளில்
உன்றன் கன்னம் வைத்து‍
தூங்கு‍ என்றன் இமை பெண்ணே