Monday, March 23, 2026

செயலே பெயர்

நான்
எழுதிய
கவிதை நூலுக்கு
உன் பெயர்
சூட்ட விரும்பினேன்.

சூட்டினேன்...

நீ
செய்த
செயலையே!

காதல் வகுப்பு

நீ
ஏதோ ஏதோ
சொல்லிக்
கொடுக்கிறாய்
எனக்கு.

சிறப்பாகவே
கற்றுக் கொள்கிறேன்
உன்னிடம்.

ஆனால் -

நீ
எடுக்கும்
வகுப்புகளுக்கு
நான்
வைத்த பெயர்...

காதல்.

சிறந்த சிந்தனை

சிறப்பான 
சிந்தனைகளையே
கொள்ள வேண்டும்
என்கிறார்கள்
பெரியோர்கள்.

அதனால் -

நான்
சிந்திக்கிறேன்...

உன்னை
மட்டும்.

கனவல்ல…

என்னைப்
பார்த்து
கை அசைத்தாய்!

என்
அருகே
வந்தாய்!

என்
கையோடு கை
கோர்த்தாய்!

என்னை
கட்டிப்
பிடித்தாய்!

எனக்கு
முத்தம்
தந்தாய்!

என் 
கனவில்
என்றேன் 
அவளிடம்

சிறு புன்னகையோடு
சொன்னாள்

அது
கனவல்ல...

ராணி

நீயே
ராணி

எங்கள்
ராணி

நாங்கள்
உன் 
குடிமக்கள்

எங்கள்
தேவையறிந்து
தீர்த்து வைப்பது
உன் கடமை

அதனால் -

நீயே
எங்கள்
ராணி

மூதுரை பொய்யாக்கினாள்

காண மயிலாட,
கண்டிருந்த வான்கோழி —

மூதுரை சொல்லை
பொய்யாக்கியவள்
நீ.

நீ செய்யும்
செயலைக் கண்டு,

செயலில் இறங்கி
மேம்பட்டோம்.

உன்னைக் கண்டு
அறிவடைந்து —

வெற்றியானோம்
நாங்கள்.

Thursday, March 19, 2026

மெளனமாகிய சட்டம்

"தூங்கி
பல ஆண்டுகள்
ஆகி விட்டன"
நான்.

"ஏன்?"
அவள் பதற்றத்துடன்.

"வழிபாட்டுத் தலங்களில்
கட்டுக்கடங்காத ஒலி"
நான்.

"நம்
அரசியலமைப்புச் சட்டம்
தூங்குவதற்கான உரிமையைத்
தருகிறது.
புகார் செய்ய
வேண்டியதுதானே"
அவள்.

"சட்டம்
அவர்களிடம்
செல்லாது"
நான்.

சட்டம்
மெளனமானது.

அவள்
மூர்ச்சையானாள் -

சட்டம் 
செத்துவிட்டதோ 
என்று.