யாரோ சிலரை எழுப்ப
ஊரையே எழுப்பும்
பள்ளிவாசல்கள்.
கடவுளை எழுப்புவதாகச் சொல்லி
மக்களின் தூக்கத்தை கலைக்கும்
சுப்ரபாதங்கள்.
காலையைக் கொண்டு வருவதாக
மணியோசையில்
அமைதியை உடைக்கும்
சர்ச்சுகள்.
காக்கும் பெயரில்
கவசங்கள் பாடி
காதுகளை கிழிக்கும்
கோயில்கள்.
போதனை என்ற போர்வையில்
உருக்கே உபதேசம் சிந்தும்
பள்ளிவாசல்கள்.
ஏன் அடிக்கிறோம் என்று தெரியாமல்
மணியைத் துரத்திக் கொண்டே இருக்கும்
கோயில்கள்.
பொது இடம் என்பதைக்
தனதாக்கிக் கொள்ளும்
வழித்தட பிள்ளையார்கள்.
விதிமீறல்களே
எங்கள் வழக்கம் என
ஒலியும் ஒளியும் கூட்டி
மக்களின் நிம்மதியை
நெருக்கும்
வழிபாட்டு தலங்கள்.
அப்படியானால்...
ஆம்!
நான் வாழ்வது
நரகத்தில்தான்.
நரகம் இருக்கிறது.
அதனால் -
இருக்கிறார்
கடவுள்.
அழகன் Azhagan
Tuesday, March 24, 2026
கடவுள் இருக்கிறார்
Monday, March 23, 2026
காதல் வகுப்பு
நீ
ஏதோ ஏதோ
சொல்லிக்
கொடுக்கிறாய்
எனக்கு.
சிறப்பாகவே
கற்றுக் கொள்கிறேன்
உன்னிடம்.
ஆனால் -
நீ
எடுக்கும்
வகுப்புகளுக்கு
நான்
வைத்த பெயர்...
காதல்.
சிறந்த சிந்தனை
சிறப்பான
சிந்தனைகளையே
கொள்ள வேண்டும்
என்கிறார்கள்
பெரியோர்கள்.
அதனால் -
நான்
சிந்திக்கிறேன்...
உன்னை
மட்டும்.
கனவல்ல…
என்னைப்
பார்த்து
கை அசைத்தாய்!
என்
அருகே
வந்தாய்!
என்
கையோடு கை
கோர்த்தாய்!
என்னை
கட்டிப்
பிடித்தாய்!
எனக்கு
முத்தம்
தந்தாய்!
என்
கனவில்
என்றேன்
அவளிடம்
சிறு புன்னகையோடு
சொன்னாள்
அது
கனவல்ல...
ராணி
நீயே
ராணி
எங்கள்
ராணி
நாங்கள்
உன்
குடிமக்கள்
எங்கள்
தேவையறிந்து
தீர்த்து வைப்பது
உன் கடமை
அதனால் -
நீயே
எங்கள்
ராணி
மூதுரை பொய்யாக்கினாள்
காண மயிலாட,
கண்டிருந்த வான்கோழி —
மூதுரை சொல்லை
பொய்யாக்கியவள்
நீ.
நீ செய்யும்
செயலைக் கண்டு,
செயலில் இறங்கி
மேம்பட்டோம்.
உன்னைக் கண்டு
அறிவடைந்து —
வெற்றியானோம்
நாங்கள்.
Subscribe to:
Comments (Atom)