என்னை
தன்னிடம்
ஈர்த்து
புவியிர்ப்பு விசையை
பொய்யாக்கியவள்.
அவளாகி
நிற்கும்
என்னை
காந்தம் கவர் விசையை
காணாமலாக்கியவள்.
காதலை
என்னிடம்
பொழிந்து
நீயூட்டனின் மூன்றாம் விதியை
இல்லாமலாக்கியவள்..
உண்மையை
பொய்யாக்குபவள்
பொய்யை
உண்மையாக்குபவள்
என் அவள்.
அழகன் Azhagan
Tuesday, March 17, 2026
விதிகளை மீறும் அவள்
காற்றாய் அவள்
காற்று
அலைகளைத்
தள்ளுவது போல
காற்று
மேகங்களை
நகர்த்துவது போல
காற்று
கிளைகளைத்
அசைப்பது போல
காற்று
தூசுகளை
பறக்கவைப்பது போல
நான் -
போகும் வழி
தொலைந்து
செய்வது
அறியாது
தவிக்கையில்
என்னைத்
தள்ளுபவள்
அவளே!
உனக்காக எல்லாம்
கடற்கரை மணல் கூட
உன் கால்தடம்
பதியாதவாறு
உன் மெல்லிய பாதத்தைப்
தாங்கிக் கொள்கிறது.
காற்று கூட
நீ மூச்சு விட
சிரமப்படாவண்ணம்
அதுவே உள் சென்று
மென்மையாய் வெளியேறுகிறது.
இந்த பூமி
நீ நடந்து
உன் கால்கள் வலிக்காதபடி
தானே சுற்றி
நீ செல்லும் இடத்தை
உன் காலடிக்கு
கொண்டு வருகிறது.
நீ போதுமே ...
உன் புன்னகை
ஒன்றே போதுமே
இன்றைய நாளை
இனிமையாய் ஆக்கிட .
நீ
என்னருகே இருப்பது
மட்டும் போதுமே
நாளையை எதிர்கொள்ள.
நீ
நேற்றிருந்த
உன் நினைவுகள்
மட்டும் போதுமே
மகிழ்ச்சியை
மீட்டெடுத்துக்கொள்ள.
நதியாகி நீ
அன்று
ஒரு நாள்
கனவில்
நதியின்
ஓரத்தில்
நின்று கொண்டிருக்கிறேன்
நான்.
ஓடிக்கொண்டிருக்கும் நதி
திடீரென
நீயாய்
மாறியது.
கரையின் ஓரத்தில்
நான்
மெல்லக் குனிந்து
என்
இரு கைகளாலும்
உன்னை அள்ளுகிறேன்.
நீ
என் கை
இடுக்குகளின் வழியாக
மீண்டும் நதிக்கே
சென்று விடுகிறாய்.
மீண்டும் மீண்டும்
அள்ளுகிறேன்
உன்னை.
மீண்டும் மீண்டும்
நீ
நதிக்கே
சென்று விடுகிறாய்.
என் கைகளை
மெல்லப் பார்க்கிறேன்.
ஈரமாய்
என் கைகள்.
கனவிலிருந்து
விழித்தேன்!
உன் கை விரல்களால்
என் கை விரல்களை
பிணைத்து
என் அருகில் நீ!
குலைப்பதும் அவள்! காப்பதும் அவள்!!
என்
தூக்கத்தை
கெடுக்கிறாள்
என்னை
தூங்க
வைக்கிறாள்
என்
வேலையைச் செய்யவிடாமல்
தடுக்கிறாள்
என்னை
வேலை செய்ய
வைக்கிறாள்
என்
அமைதியை
குலைக்கிறாள்
என்னை
அமைதியாய்
ஆக்கிறாள்
என்
சிந்தனையை
தடுக்கிறாள்
என்னைச்
சிந்திக்க
வைக்கிறாள்
ஆம்!
அவள் தான்!
அவளே தான்!!
அலைகளும் அவளும்
அன்றொரு நாள்
இரவில்
ஒரு கனவு
ஆரவாரமான கடலில்
நாம் இருவரும் படகில்
பலமான காற்று
தத்தளிக்கிறது படகு
துடுப்புகளையோ
காணவில்லை
காற்று
அடிக்கிறது
படுவேகமாய்
படகு
தத்தளிக்கிறது
மேலும் கீழுமாய்
திடிக்கிட்டு
விழித்தேன்
என்
கைதலையனை
விடுத்து
தள்ளி
அவள்!