பக்தி வேடம் கொண்டு
'ஒலி' பெருக்கி
அடுத்தவர் வீட்டினுள்
இரைச்சலாய்
அத்துமீறி நுழையும்
'பக்தி'மான்கள்
அழகன் Azhagan
திங்கள், 3 ஆகஸ்ட், 2026
பக்திப் பரவசம்
புதன், 29 ஜூலை, 2026
சத்தமே சாமி
ஆடி மாதம்
அம்மனுக்கு கொண்டாட்டம்
போகும் வரும் வழியடைத்து
தெருவெங்கும் பந்தல்
தெருவை உடைத்து பாழாக்கி
தெருவடைத்து
வழியடைத்து
காட்டுக் கூச்சலாய்
ஒலி பெருக்கி பாடி
மக்கள்
உயிர் வாழ
கண் காது வாய் முடவைத்து
தனக்கென
அம்மனும்
கண் மூடிக்கொள்ள
சாதி மதமென
சட்டமும்
கண் மூடிக்கொள்ள
ஆடி மாதம்
அம்மனுக்கு கொண்டாட்டம்
மக்களுக்கு...
செவ்வாய், 21 ஜூலை, 2026
பூ மாலை உனக்கு!
உன் சிலைக்கு
மாலை அணிவித்திட
கார்கள் கார்களாய்
ஒலி எழுப்பிக் கொண்டே
கூட்டம் கூட்டமாய்
கூப்பாடு போட்டுக் கொண்டே
ஊரே அதிர
வேட்டுகள் வெடித்து
இடையூறு செய்து
அவர்கள்-
அவர்களை
விளம்பரப்படுத்த...
இதற்காகத்தானோ-
நீ
பிறந்தாயோ
காமராசா!
ஞாயிறு, 5 ஜூலை, 2026
கட்டா குஸ்தி 2 - திரைவிமர்சனம்
பனம் பழம் என்பது தமிழ்நாட்டின் பாரம்பரிய மரமான பனை மரத்தில் விளையும், மிகுந்த சத்துக்கள் நிறைந்த ஒரு பழமாகும்.
"காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக" 'கட்டா குஸ்தி 2' படம் முழுவதும் அமைந்திருக்கிறது. அப்படி இருந்துவிட்டுப் போகட்டுமே, நமக்குச் சுவையான பனம்பழம் போன்றதொரு நல்ல படம் கிடைத்திருக்கிறதே, அது மகிழ்ச்சி தானே!
நாம் சிரித்துக்கொண்டே ரசிக்கக்கூடிய மிகச்சிறந்த ஒரு பொழுதுபோக்குத் திரைப்படம் இது. அதே சமயம், எவ்வித அலுப்பும் சலிப்பும் தட்டாமல், பல நல்ல கருத்துக்களை மிக அழகாக நமக்குக் சொல்கிறது.
இப்படத்தின் ஆகச்சிறந்த பலமே, குழந்தை நட்சத்திரமாக வரும் சாரா தான். படத்திற்கு அவர்தான் 'பனை மரம்'.
ஒரு சிறந்த ஆசிரியர் கதை சொல்லிப் பாடம் எடுப்பதைப் போல, இத்திரைப்படம் மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
செவ்வாய், 23 ஜூன், 2026
மதக் கொலைகள்
கோயில்கள்
சர்ச்சுகள்
பள்ளிவாசல்கள்
ஒலிகள்
அதிகாலையில் இருந்து
இரவு வரை
ஒலி
உற்பத்தி நிலையங்களாய்
சட்டத்தின் எல்லைகளை
மீறியே
எப்போதும்
சட்டம்
எங்களை
என்ன செய்யும்
என்ற மிதப்பில்
நாள்தோறும்
சிறுகச் சிறுக
என்னைக் கொல்லும்
என் சாவை
விரைவுபடுத்தும்
வழிபாட்டு இரைச்சல்கள்
சாவை நோக்கி
நான்...
வெள்ளி, 8 மே, 2026
From Statesmanship to Strategy
திங்கள், 4 மே, 2026
'கர' - திரை விமர்சனம்
டீ குடிப்பது போல வங்கியை கொள்ளையடிப்பது அவ்வளவு எளிது.
பிடிபட்ட திருடன் மீது தீர்க்கப்படாத எல்லா வழக்குகளையும் சுமத்துவதுதான் போலீஸ் வேலை. சாட்சிகள் இங்கே தேடப்படுவதில்லை, 'உருவாக்கப்படுகின்றன'.
கிராமத்தில் வசிப்பவர்கள் எல்லாரும் விவசாயத்தை விடாமல் அங்கேயே இருப்பவர்கள்.
வங்கியின் தொழில் பொது மக்களை ஏமாற்றுவது மட்டுமே.
தன் காதலன் திருடன் என்று தெரிந்தும், கண்ணை மூடிக்கொண்டு காதலித்துத் திருமணம் செய்வதுதான் கதாநாயகியின் ஒரே வேலை.
மனைவியைப் பொறுப்புடன் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, அவளை விடுதியில் தனியாக விட்டுவிட்டு வருவதுதான் இந்தப் படத்தின் 'உன்னதமான' பொறுப்புணர்வு!
கதாநாயகன் மனம் மாற வேண்டும் என்பதற்காகவே தந்தை சென்டிமென்ட்டாக இறந்து போவார். இது தான் தந்தை பாசம்.
வங்கியின் மேலதிகாரியே கூலிப்படை வைத்துத் தன் வங்கியைக் கொள்ளையடிப்பார். இதுவே வில்லத்தனம்.
செய்தித்தாள் முதல் பக்கத்தில் இடம் பிடிக்க ஒரு போலீஸ் அதிகாரி சட்டத்திற்குப் புறம்பான எதை வேண்டுமானாலும் செய்வார்.
இதுதான் 'கர'.
ஒரு படம் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இப்படத்தை ஒரு பாடமாகவே வைக்கலாம்!
படம் நடைபெறும் அந்த காலகட்டம் (Period Setting) மட்டுமே ஓரளவிற்கு படத்தில் ஆறுதலான அம்சம்.