"தூங்கி
பல ஆண்டுகள்
ஆகி விட்டன"
நான்.
"ஏன்?"
அவள் பதற்றத்துடன்.
"வழிபாட்டுத் தலங்களில்
கட்டுக்கடங்காத ஒலி"
நான்.
"நம்
அரசியலமைப்புச் சட்டம்
தூங்குவதற்கான உரிமையைத்
தருகிறது.
புகார் செய்ய
வேண்டியதுதானே"
அவள்.
"சட்டம்
அவர்களிடம்
செல்லாது"
நான்.
சட்டம்
மெளனமானது.
அவள்
மூர்ச்சையானாள் -
சட்டம்
செத்துவிட்டதோ
என்று.
அழகன் Azhagan
Thursday, March 19, 2026
மெளனமாகிய சட்டம்
என்னை அறிந்தேன்
நான் -
பறக்கக் தெரியாத
பறவையாய்
நீந்தத் தெரியாத
மீனாய்
பாயத் தெரியாத
புலியாய்
பாடத் தெரியாத
குயிலாய்
இருந்தேன்
உன்னைக்
காணும் வரை
உன்னைக்
கண்டேன்
என்னை
அறிந்தேன்
உன்னுள்
தொலைந்தேன்.
ஒன்று
வானில்
நட்சத்திரங்களை
ஒன்று
இரண்டு
மூன்று
...
...
...
...
ஆயிரத்தி பத்து
அவள்
வந்தாள்
ஒன்று
என
எண்ணி முடித்தேன்.
பார்வை ≠ உண்மை
"நீ
மிகப் மிகப்
பெரியவள்".
"சரி"
அவள்.
"தலைக்கனம்?"
"இதில் என்ன
தலைக்கனம்?"
அவள்.
"நீ
மிகப் மிகப்
பெரியவள் என்று
நம்புகிறாய் அல்லவா!"
நான்.
"நீ
மிகப் மிகப்
பெரியவள்
என்னைப் பற்றி
உன் கருத்து.
நீ
கருத்து சொன்னாய்
அந்தக்
கருத்தைக் கேட்டுக் கொண்டேன்
அவ்வளவே"
அவள்
"புரியவில்லை"
நான்.
"யார் என்றாலும்
யார் பற்றியும்
கருத்து கூறலாம்
அது
உண்மையா?
பொய்யா?
என ஏன்
ஆராய வேண்டும்"
அவள்.
திகைப்பில்
வியப்பில்
நான்.
எல்லையற்றவன்
"உன்னை
வரையப் போகிறேன்"
அவள்.
ஆசையாய்
தலையாட்டினேன்.
என்னை -
நிற்க வைத்தாள்.
ஓவியப் பலகையில்
வரைய ஆரம்பித்தாள்...
"முடிந்தது
பார்க்க வா!"
அவள்.
சென்றேன்.
பார்த்தால்
வெறும்
வெள்ளை தாள் ...
ஓவியம்
ஏதுமின்றி.
என்ன இது?
என்ற
முக அசைப்பில்
அவளைப் பார்த்தேன்.
அவள்
சலனமின்றி -
"நீ
எல்லையற்றவன்
தாளுக்குள்
அடங்கவில்லை
நீ
வெள்ளை மனம்
படைத்தவன்
வண்ணங்கள்
ஏதுமில்லை"
என்று சொல்லி
கலகலவென
பலமாகச்
சிரிந்தாள்.
அந்தச்
சிரிப்பில்
நான்
...
சொற்கள் நீ
"கவிஞனா?"
அவள்.
"இல்லை"
நான்.
"கவிதைகள் எழுதுகிறாயே"
அவள்.
"கவிதை
எழுதுபவர்கள்
எல்லாம் கவிஞர்களா?"
நான்.
"இருக்கட்டும்...
என்னைப்
பற்றி கவிதை
எழுது."
அவள்.
"முடியாது"
நான்.
"ஏன்?"
அவள்.
"என்
சொற்கள்
எல்லாம்
நீயாகி விட்டன."
நான்.
அவள்
செல்லமாய்
என் கண்ணத்தில்
முத்தமிட்டுச்
சென்றாள்.