நீ
சூரியன் என்றால்
நான்
நிலவு
நீ
காற்று என்றால்
நான்
தூசி
நீ
ஆறு என்றால்
நான்
ஆளில்லா ஓடம்
நீ
நிலம் என்றால்
நான்
மரம்
நீ
வானம் என்றால்
நான்
பூமி
அழகன் Azhagan
Wednesday, February 11, 2026
நீ நான் கவிதை
கவிதை எழுதிய காதல்
காதலை உருவாக்கிய
நீ
கவிதை
காதலால் நான்
எழுதியது
கவிதை
எந்தக்
கவிதை
நீ?
காதலாய்
நான்
கவிதையாய்
நீ
எப்போழுதும்
காதல் கவிதையாய்
நாம்
நீயும் நானும் – ஒரே கவிதை
உன் உள்
இருக்கும் என்னை
நீ அறிய
என்னுள் செல்கிறாய்
ஆனால்
நான் மீண்டும்
உன் உள் செல்கிறேன்.
நீயும்
விடாமல்
என் உள் செல்கிறாய்
வெல்வது
யார்?
வெல்லுதல்
வேண்டுமோ?
என் உள்
நீயோ
உன் உள்
நானோ
அப்படியே இருந்துவிட்டு
போவோமே!
இருக்கும் என்னை
நீ அறிய
என்னுள் செல்கிறாய்
ஆனால்
நான் மீண்டும்
உன் உள் செல்கிறேன்.
நீயும்
விடாமல்
என் உள் செல்கிறாய்
வெல்வது
யார்?
வெல்லுதல்
வேண்டுமோ?
என் உள்
நீயோ
உன் உள்
நானோ
அப்படியே இருந்துவிட்டு
போவோமே!
என் கவிதை யாகும் நீ
என்னை நானாக்க பார்க்க
முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும்
தோல்வியையே தழுவுகிறாய் நீ!
உன் தோல்விகள்
எனக்கு மன வருத்தம் தந்தாலும்
உன்னுள் இருந்து
வெளி வராமலே
நான்!
நான் நானாக
இருப்பதல்ல
என் மகிழ்ச்சி.
உன் உள்
இருப்பதே
என் மகிழ்ச்சி
யாரின் கனவு, யாரின் கவிதை?
நான் காணும்
கனவு
நீ!
என் கனவின்
நாயகி
நீ!
என் கனவு
முழுவதும்
நீ
கனவில்
விழித்திருக்கிறேனா!
விழிப்பில்
கனா காணுகிறேனா!!
உன்னுள் இருக்கும்
நான் காணும்
கனவு
என் கனவா?
உன் கனவா?
Subscribe to:
Comments (Atom)