"மக்களே!
நாடு
மோசமான
கால கட்டத்தில்
உள்ளது
தியாகம்
செய்யத்
தயராக இருங்கள்".
இது
தலைவர்
உடனே
கூட்டத்திலிருந்து
ஒரு குரல்
"இந்த
ஒருமுறை மட்டும்
நீங்கள்
உங்கள் பதவிகளை
தியாகம் செய்யுங்கள்.
அதுவும்
எங்களுக்காகவே.
நாங்கள் தானே
உங்கள்
உயிர்".
எனக் கேட்க
இருண்டது
தலைவரின் முகம்.
அழகன் Azhagan
Friday, March 27, 2026
துறப்போம்! எதை வேண்டுமானாலும்
ஒரே… ஆனால் சமம் இல்லை
ஒரே நாடு
ஒரே மொழி
ஒரே தெய்வம்
ஒரே தேர்தல்
ஒரே தலைவன்
எனக் கோஷமிடுவோர்களிடம்
மக்கள் எல்லாம்
ஒரே நிரை
என்று மட்டும்
ஏற்றுக்கொள்ள
மறுப்பது ஏன்?
என்று நான் கேட்க
எங்கள்
வேதம்
சொல்கிறது ...
பிறப்பால்
நாங்கள்
உயர்ந்தவர்கள் !
முற்பிறவி
கர்மாவால்
நீங்கள்
எங்களுக்கு
ஈடாக மாட்டீர்கள்!
என
மாற்றிப் பேசும்
சந்தர்ப்பவாதிகள்!
இவர்கள்
சமத்துவம் -
தெரிவு செய்த
இடங்களில் மட்டுமே!
ஒலிபெருக்கியே பக்தி
நம் ஊரில்
பல்வேறு
தெய்வங்கள்
பல்வேறு
தெய்வங்களுக்கும்
பற்பல
கோயில்கள்
பற்பல
வழிப்பாட்டு
முறைகள்
பக்தர்கள்
எனப் பெயர் கொண்டு
பக்தி என்ற
குறிக்கொள் மறந்து
நானே
பெரியவன்
என் பெயரை
நிலைநாட்டுவேன்
என
ஊர் அதிர
ஒலிபெருக்கி அமைத்து
அத் தெய்வ
வழிப்பாட்டு முறை
விட்டு விலகி
ஏதேதோ
தெய்வகளின் பாடல் -
வரிசை கூட தெரியாமல்
சத்தம்
ஒன்றே குறிக்கொளாய்
பூடம் தெரியாமல்
சாமியாடும்
ஒலிபெருக்கி
பக்த'சாமிகள்'.
சொர்க்கம் தேடி நரகம்
சொர்க்கம்
செல்ல வேண்டி
உழைந்த காசையும்
நேரத்தையும்
வீணாக்கி
தெரியாத
சொர்க்க
ஆசையில்
வாழும்
வாழ்க்கையை
நரகமாக்கும்
மாக்கள்.
பெரியார்
"மூட நம்பிக்கை
கொள்ளாதே"
யார் சொன்னார்கள்?
"சாமி
சொல்லிச்சு"
"கடவுள்
இல்லவே
இல்லையாம்"
யார் சொன்னார்கள்?
"சாமி
சொல்லிச்சு"
"எந்தச்
சாமி"
நம்ம
ராம'சாமி' —
பெரியார் தான்.
பயத்தை விதைக்கும் மதங்கள்
காலில்
கைகளில்
பல நிறங்களில்
கயிறுகள் கட்டினால்
இல்லா
பேய்கள்
பிசாசுகள்
அண்டாது...
தூங்கும்
நேரத்தில்
தூங்காது
விழித்தெழுந்து
விளக்கெற்றினால்
உழைக்காமலே
செல்வம் வந்து சேரும்...
இன்ன நாளில்
இன்ன நேரத்தில்
முன்னோரை வழிபட்டால்
அவர்கள்
சொர்கம் செல்வர்
என ஒவ்வொரு ஆண்டும்
வழிபடச் செய்வித்து ...
இன்ன பல
அறிவுக்குப் புறம்பான
'நம்பிக்கை'களை
இட்டுக் கட்டி
அறிவை அல்ல -
மூட நம்பிக்கைகளையே
வளர்க்கும்
மதங்கள்.
நவீன தீண்டாமை
மக்கள்
வாழும்
ஒரு ஊர்
ஊரின் உள்
சாலையை பிரிக்க
ஒரு
நீண்ட சுவர்
மக்கள் -
வலப்பக்கமிருந்து
இடப்பக்கமாய்
இடப்பக்கமிருந்து
வலப்பக்கமாய்
செல்வது
போவது
தடுத்து
ஒரு
நூறு மீட்டர் நடக்க
பல கிலோ மீட்டர்
சுற்ற வைக்கும்
நவீன
தீண்டாமைச் சுவர்
அரசே
கட்டுகிறது.