வெள்ளி, 8 மே, 2026

From Statesmanship to Strategy

There was a time when I believed Gandhi and Thirumavalavan were cut from a different cloth—statesmen who genuinely sought the people's upliftment without succumbing to cheap tactics. But the recent political shifts following the Tamil Nadu elections suggest otherwise. Their pivot toward the TVK feels more like a calculated move for power than a principled decision. It’s disappointing to realize that, in the end, even those I considered exceptional are governed by the same pragmatism as the rest.


திங்கள், 4 மே, 2026

'கர' - திரை விமர்சனம்

டீ குடிப்பது போல வங்கியை கொள்ளையடிப்பது அவ்வளவு எளிது.

பிடிபட்ட திருடன் மீது தீர்க்கப்படாத எல்லா வழக்குகளையும் சுமத்துவதுதான் போலீஸ் வேலை. சாட்சிகள் இங்கே தேடப்படுவதில்லை, 'உருவாக்கப்படுகின்றன'.

கிராமத்தில் வசிப்பவர்கள் எல்லாரும் விவசாயத்தை விடாமல் அங்கேயே இருப்பவர்கள்.

வங்கியின் தொழில்  பொது மக்களை ஏமாற்றுவது மட்டுமே.

தன் காதலன் திருடன் என்று தெரிந்தும், கண்ணை மூடிக்கொண்டு காதலித்துத் திருமணம் செய்வதுதான் கதாநாயகியின்  ஒரே வேலை.

மனைவியைப் பொறுப்புடன் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, அவளை விடுதியில் தனியாக விட்டுவிட்டு வருவதுதான் இந்தப் படத்தின் 'உன்னதமான' பொறுப்புணர்வு!

கதாநாயகன் மனம் மாற வேண்டும் என்பதற்காகவே தந்தை சென்டிமென்ட்டாக இறந்து போவார். இது தான் தந்தை பாசம்.

வங்கியின் மேலதிகாரியே கூலிப்படை வைத்துத் தன் வங்கியைக் கொள்ளையடிப்பார். இதுவே  வில்லத்தனம்.

செய்தித்தாள் முதல் பக்கத்தில் இடம் பிடிக்க ஒரு போலீஸ் அதிகாரி சட்டத்திற்குப் புறம்பான எதை வேண்டுமானாலும் செய்வார்.

இதுதான் 'கர'.

ஒரு படம் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இப்படத்தை ஒரு பாடமாகவே வைக்கலாம்!

படம் நடைபெறும் அந்த காலகட்டம் (Period Setting) மட்டுமே ஓரளவிற்கு படத்தில் ஆறுதலான அம்சம்.

சனி, 2 மே, 2026

நம் வாக்கு ஒரு பொம்மையா? ஜனநாயகத்தை விளையாட்டுப் பொருளாக்கலாமா?

ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல் திருவிழா என்று நினைத்தால் அது ஒரு மாபெரும் தவறு. ஜனநாயகம் என்பது நம் சமூகத்தின் எதிர்காலத்தை நாமே தீர்மானிக்கும் மிக உயரிய அதிகாரம்.

இன்றைய காலகட்டத்தில் வாக்களிப்பது என்பது உரிமை என்பதிலிருந்து விலகி, ஒரு வேடிக்கையான செயலாக மாற்றப்பட்டு வருகிறதோ என்ற அச்சம் எழுகிறது.

குறிப்பாக, அரசியல் அறிவோ அல்லது சமூகப் புரிதலோ இல்லாத சிறு வயதுக் குழந்தைகள் "ஏதாவது சாப்பிட வேண்டும்" அல்லது "விளையாட வேண்டும்" என்று கேட்பதைப் போல, அவர்களின் விருப்பத்திற்காகப் பெற்றோர்கள் வாக்களிப்பது என்பது ஒரு ஆபத்தான முன்னுதாரணம்.

வாக்கு என்பது ஒரு சிறு குழந்ததையின் விளையாட்டுப் பொம்மையா?

சிறு குழந்தைகளுக்குப் பசி எடுத்தால் உணவு பிடிக்கும், விளையாட அழகான பொம்மைகள் பிடிக்கும். ஆனால், ஒரு நாட்டின் பொருளாதாரம், சட்டம், மற்றும் கொள்கைகள் குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தற்காலிக மகிழ்ச்சிக்காகவோ அல்லது அவர்களின் பிடிவாதத்திற்காகவோ ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிப்பது என்பது, ஒரு அறுவை சிகிச்சை நிபுணரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஒரு குழந்தையிடம் ஒப்படைப்பதற்குச் சமம்.

வாக்களிப்பது என்பது "சாக்லேட்" வாங்குவது போன்ற ஒரு சிறுபிள்ளைத்தனமான செயல் அல்ல. அது உங்கள் குழந்தையின் அடுத்த 20 ஆண்டுகால வாழ்க்கையைத் தீர்மானிக்கும் ஆவணம்.

ஜனநாயகத்தின் வலிமை எதில் உள்ளது?

ஒரு ஜனநாயகம் எப்போது வலுவடைகிறது என்றால், வாக்காளர் ஒவ்வொருவரும் சுய அறிவோடும், தர்க்க ரீதியாகவும் சிந்திக்கும்போதுதான்.

தகுதியானத் தலைமை: கொள்கைகளை ஆராய்ந்து வாக்களிக்கும்போதுதான் தகுதியானவர்கள் அதிகாரத்திற்கு வருவார்கள்.

கேள்வி கேட்கும் உரிமை: நாம் சிந்தித்து வாக்களித்தால் மட்டுமே, ஆட்சியாளர்கள் தவறு செய்யும்போது அவர்களைத் தட்டிக் கேட்கும் தார்மீக உரிமை நமக்கு இருக்கும்.

குழந்தைகளின் விருப்பத்திற்காக வாக்களிக்கும்போது, அங்கே "சிந்தனை" மறைந்து "உணர்ச்சி" மேலோங்குகிறது. இது ஜனநாயகத்தின் வேரையே அரித்துவிடும்.

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை நீங்களே சிதைக்கிறீர்கள்

"என் குழந்தை ஆசைப்படுகிறான் / ஆசைப்படுகிறாள்" என்பதற்காக நீங்கள் அளிக்கும் ஒரு தவறான வாக்கு, உண்மையில் அந்தச் சிறுவன் அல்லது சிறுமியின் எதிர்காலத்தையே சிதைக்கும் செயலாக முடியும்.

வாய்ப்புகள் பறிபோதல்: தரமற்ற கல்விமுறை அல்லது வேலைவாய்ப்பற்ற சூழலை உருவாக்கும் ஒரு கட்சிக்கு நீங்கள் வாக்களித்தால், உங்கள் குழந்தை வளர்ந்து வரும்போது அவர்களுக்குத் தகுதியான வாழ்க்கை கிடைக்காமல் போகும்.

கடனாளியாகும் தலைமுறை: தற்காலிகமான, கவர்ச்சிகரமான நடைமுறைக்கு ஒவ்வாத வாக்குறுதிகளுக்காகவோ வாக்களிப்பது, நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழிக்கும். அதன் விளைவாக ஏற்படும் கடன் சுமையை உங்கள் குழந்தைதான் சுமக்க வேண்டியிருக்கும்.

பொறுப்பற்றத் தலைமை: அரசியல்வாதிகள் "மக்களை எளிதாக ஏமாற்றிவிடலாம், உணர்ச்சிகளைத் தூண்டினால் போதும்" என்று நினைக்கத் தொடங்கிவிடுவார்கள். இது தரமான ஆளுமைகள் அரசியலுக்கு வருவதைத் தடுத்துவிடும்.

நல்லாட்சி வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்?

நாம் நல்லாட்சியை எதிர்பார்க்கிறோம், ஆனால் அதற்கான விலையைத் தரத் தயாராக இருக்கிறோமா? நல்லாட்சி என்பது தானாக வராது; அது விழிப்புணர்வுள்ள வாக்காளர்களால் உருவாக்கப்படுவது.

கொள்கையே பிரதானம்: சாதி, மதம் அல்லது தனிநபர் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தராமல், அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை மற்றும் கடந்தகாலச் செயல்பாடுகளைக் கவனிக்க வேண்டும்.

தர்க்க ரீதியான முடிவு: ஒரு கட்சியின் திட்டம் அடுத்த தலைமுறைக்கு என்ன நன்மைகளைச் செய்யும் என்பதை ஆராய வேண்டும்.

பெற்றோரின் கடமை: உங்கள் குழந்தைக்கு இன்று ஒரு பொம்மையை வாங்கிக் கொடுப்பதை விட, அவன் வளர்ந்து வாழப் போகும் இந்தச் சமூகம் பாதுகாப்பானதாகவும், நேர்மையானதாகவும் இருப்பதை உறுதி செய்வதே ஒரு பெற்றோராக நீங்கள் செய்யும் ஆகச்சிறந்த அறம்.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.

- சிலப்பதிகாரம்

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என்பது  அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான எச்சரிக்கை. இங்கு, வாக்காளர்களே அதிகாரத்தில் இருப்பவர்கள்.  தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும்  உரிமை உடையவர்கள். ஒரு நாட்டின் தலையெழுத்தை வடிவமைக்கும் அந்த உரிமையை, வெறும் விளையாட்டுப் போலவோ அல்லது குழந்தைகளின் தற்காலிக ஆசைக்காகவோ தவறாகப் பயன்படுத்தினால், அதன் விளைவு முதலில் வாக்களித்த வாக்காளர்களையே பாதிக்கும். சிந்திக்காமல் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் நமது ஜனநாயகத்தின் வலிமையைச் சிதைத்து, நம் எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்வையே கேள்விக்குறியாக்கிவிடும்.

வாக்களிப்பது என்பது குழந்தைகளின் விளையாட்டு (Child's Play) அல்ல. அது ஒரு பொறுப்பு. சிற குழந்தைக்குத் தன் எதிர்காலத்தைப் பற்றித் தெரியாது, ஆனால் ஒரு பெற்றோராக உங்களுக்குத் தெரியும்.

குழந்தைகளின் தற்காலிகமான ஆசைக்காக உங்கள் வாக்கை விற்காதீர்கள். உங்கள் குழந்தையின் கைகளில் ஒரு பொம்மையைக் கொடுப்பதற்குப் பதிலாக, அவன் சுதந்திரமாகவும், கௌரவமாகவும் வாழ்வதற்கான ஒரு நல்ல சமூகத்தை உங்கள் வாக்கின் மூலம் பரிசளியுங்கள். சிந்திக்காமல் அளிக்கப்படும் வாக்கு, ஜனநாயகத்தைக் கொல்வது மட்டுமல்லாமல், உங்கள் குழந்தையின் எதிர்காலத்தையும் இருளாக்கிவிடும்.

நல்லாட்சி என்பது உங்கள் விழிப்புணர்வில் தொடங்கும் ஒரு பயணம்.

வெள்ளி, 24 ஏப்ரல், 2026

மக்களுக்கா?

அரசுப் பேருந்து
மக்களுக்காக
மக்களைச் சுமந்து கொண்டு

டோல்கேட் -
கதவுகள் திறக்கப்படவில்லை

பாஸ்டேக்கில்
பணமில்லையாம்

குடியரசுத் தலைவர்
பிரதம மந்திரி
நீதிபதிகள்
.........
செல்கிறார்கள்

இலவசமாய்

ஆனால்...

மக்களுக்கான 
மக்கள்  பேருந்துக்கு
வேண்டுமாம் பணம்

பாதிப்பு? -

மக்களுக்கு மட்டுமே

வாழ்க
மக்களாட்சி 

செவ்வாய், 21 ஏப்ரல், 2026

வீடு… அமைதி?

வீடாம் வீடு
நம் வீடு

பாதுகாப்பாய் 
தங்கிடவும்

மகிழ்ச்சியாய்
மகிழ்ந்திடவும்

உடல் நலமாய்
வாழ்ந்திடவும்

மனம் நலமாய்
வாழ்ந்திடவும்

மரங்கள் சூழ
இருந்திடும்

வீடாம் வீடு
நம் வீடு

கோயில் இல்லா
ஊரில் குடியிருக்க
வேண்டாம்
என்ற ஒளவை
சொல்லுக்கிணங்க

இருக்கும்
வீடாம் வீடு
நம் வீடு

அதிகாலையில்
காட்டுக் கத்தும்
ஒலிபெருக்கியில்
அனைவர் தூக்கம்
கலைத்திடுமாம்
பள்ளிவாசல்

தொடரும்
பேரொலி
சர்ச்சுகளும்
கோவில்களுமே
போட்டி போட்டுக் கொண்டே

உள்ள நலமும்
கெட்டதாம்

உடல் நலமும்
கெட்டதாம்

மகிழ்ச்சியுதாம்
தொலைந்ததாம்

பாதுகாப்பும்
காணாமல் போனதாம்

அறிவிற் சிறந்த
ஒளவை வாக்கும்
பொய்யாய் போனதாம்

திங்கள், 13 ஏப்ரல், 2026

ரயில் நிலையம்… மக்களுக்கா?

ரயில் நிலையம்

ரயிலைப் போல
மிகப் பெரியதாய்

பல வழிகள்

மக்கள் -
உள்ளே செல்லவும்
வெளியே போகவும்

நவீனம்
என்ற பெயரில்

வழிகள் அடைத்து

அடிப்படைத் தேவைகள்
தவிர்த்து
அழகுபடுத்தி

மக்களுக்கான
இடங்களை ஆக்கிரமித்து
கட் அவுட்கள் வைத்து

மக்களுக்கான
ரயில் நிலையம் -

மக்களைப்
புறக்கணித்ததே

யாருக்கான நிலையம்?

பேரூந்து நிலையம் -

கடைகளாய்
கோவில்களாய்

அவற்றின் ஆக்கிரமிப்புகளாய் ...

பேருந்துகள்?
மக்கள்?

ஒரு பயணமே போதும்

அரசுப் பேருந்துகள் -

மக்களைக்
கால்நடைகள் போல்
நினைக்கும்

இருக்கை
ஒருவர் உட்கார கூட
வசதி அற்று

ஒடுக்கமாய் -
குறுக்கமாய்

அரசுப் பேருந்து நிறுவன
தலைவர்களும் 
அவர்களின் அணியினரும்

கார்களைத்
தவிர்ந்து

பேருந்துப் பயணமே
செய்ய வைத்தாலே

புரியும் -
புரிய வேண்டியது

பழையதுக்கு திரும்ப…

காட்டை
அழித்து திருத்தி
ஊர் செய்தான்

நாட்டைக் கைபற்றி

தன் அரண்மனை
தன் கோவில்
ஆக்கினான் 

மறுபடியும்
மற்றொருவன்

நாட்டைக் கைபற்றி

தன் அரண்மனை
தன் கோவில்
ஆக்கினான் 

இப்படியே ...

தற்போது
பழையது திரும்ப 
வேண்டுமாம்

அந்தக்
கோயிலாய்
மாற்ற வேண்டுமாம்

போராட்டம்!
போராட்டம்!!

பழையது திரும்ப 
வேண்டும் எனில்

காடாய் தானே
ஆக்க வேண்டும்

அது தானே -

நியாயம்
தர்மம்

சாமியாகும் ஆசாமிகள்

சாமி 
ஊர் சுற்றிப் பார்க்க...

ஆசாமிகள்
செல்லும் பாதை ...

மறிக்கப்பட்டு -
மாற்றப்பட்டு

பார்த்து பார்த்து -

சாமியாகும்
அரசியல்வாதிகள்

ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

அமைதியின் கனவு

அன்று ஒரு நாள்
சாலையில்

அமைதியாய்
ஹார்ன் ஒலி
இல்லாமல்

ஒழுங்கான திசையில்

நம்ப முடியாமல்
நான்...

எழுந்தது
திடீரென
ஒரு பெரும் ஒலி

என் நெஞ்சுக்குள்
உள் இறங்கியது

விழித்து எழுந்ததேன் -

எல்லா நாளும் போல்

வழிப்பாட்டுத் தலத்தின்
பேரோலி

கனவு
கனவாய் போனதுவே

என் சாவை
வேகப் படுத்தும் -

வழிப்பாட்டுத் தலங்கள்

வியாழன், 9 ஏப்ரல், 2026

வாழ்வதே வாழ்க்கை

கனவு -

காண்வதற்கே
கனவு

வாழ்க்கை -

வாழ்வதற்கே
வாழ்க்கை

கனவு கண்ட 
வாழ்க்கையையே

வாழ்வதையே - 

வாழ்க்கையாய் 
கொள்.

இரண்டு ஆறாய்!

இருவர்
சந்திப்பு

பல பேரின்
சந்திப்பாய் -

ஓன்று - 
நான்

இரண்டு -
நீ

மூன்று -
நான் நினைக்கும் நான்

நான்கு -
நீ நினைக்கும் நீ

ஐந்து -
நான் நினைக்கும் நீ

ஆறு -
நீ நினைக்கும் நான்

சந்திப்புகள்
கடினமாய் 

வாழ்வின் திருப்பம்

திருமணம் 

ஒரு குறிக்கோளின்
முடிவில்லை —

பயணத்தின்
திருப்பம்

ஒரு
நிலை

ஒரு
பாதை

காதலியுங்கள்
உங்கள் துணையை

வாழ்நாள்
எல்லாம்

புதன், 8 ஏப்ரல், 2026

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...

பிரச்சாரங்கள்
செய்யாத 
மனமாற்றத்தை

கல்வெட்டுகள்
சிலைகள்
செய்து விடுமாம்

தேர்தல் ஆணையம்

முடுங்கள்

கல்வெட்டுகள்
சிலைகளை

முடியபின் -

மக்கள் கேட்டார்கள்
இங்கே
என்ன இருந்தது

எனக் கேட்டார்கள்...

ஞாபகம் 
வந்தது -

மக்களுக்கு

மறந்ததை
ஞாபகம் படுத்தும் -

தேர்தல் ஆணையம்

திங்கள், 6 ஏப்ரல், 2026

ஒலிக்கும் அதிகாரம்

ஏதோ
தாங்கள அறிவிக்காவிட்டால்

பூமி சுற்றுவதை
நிறுத்திவிடும்

என

மணிக்கு
ஒரு தரம்
நேரத்தை

அதித ஒலியில்
நேரத்தை
அறிவிக்கும்

சர்ச்சுகள், 
கோவில்கள்

மனிதன் -

முன்னேறவே 
இல்லை

நேரம் பார்க்கத்
தெரியாது

என நம்பும் 

சர்ச்சுகள், 
கோவில்கள்

மனிதன் -

முன்னேறிடவே
கூடாது

என 
வேலை செய்யும் 
அவை.

முன்னேற்றம் பெற -

விடுபடுங்கள்

வழிபாட்டு தலங்களின்
அதிகாரத்திலிருந்து.

இயல்பாய் தன் இயல்பு

தன் இயல்பு
அறி

அதை
செயல்படுத்து

இயல்பாய்
செயல்படுத்த

விளையாட்டாய்
மாறி

எளிதாய்

புது படைப்புச்
சிந்தனையாய்

மலரும்

போதையைத் தேடும் தும்பி

மகரந்தம் 
தேடி வாழும்  
தும்பியே! 

உன் விருப்பம் 
சொல்லாமல்

உள்ளதை
உள்ளபடி
சொல்வாயாக

இது
குறுந்தொகை
சொல்வது

பத்திரிக்கையாளர்களின்
பாலபாடமும் 
இதுவே

ஆனால்
உண்மை -

பணம்
புகழ்
காமம்
போதை

ஆசையே 
கொள்கையாய்.

தன்விருப்பம்
தொலைத்து விட்டு

கொடுப்பவன்
சொல்லவதே
செய்தியாய் -

பத்திரிக்கையாளர்களின்

புது நெறி

பிரம்ம முகூர்த்தம்

பலன் பலவாகும்
என்ற
வாய்ச் சொல் 
கேட்டு
நம்பி

தூக்கம் தொலைத்து
குளித்து
தீபம் ஏற்றி
வழிபட்டு

வேலை நேரத்தில்
தூங்கி வழிந்து
வேலையைத் தொலைத்து

திக்கற்று நின்றதே -

பலன்

பக்தியாய்

வாழ்க்கை

இழந்து.

சாக்ரடீஸ் பார்க்காத அரசியல்

அரசியல் என்றால் -
 
கொள்கைகள், 
உரிமைகள் 
 நீதி

என்று 
நீங்கள் நினைத்தால் 

நீங்கள்...

அரசியல் என்பது -

கொடிகள் 
ஏந்துவது

முழக்கங்களை 
எழுப்புவது

மாற்றுக் கருத்துக்களை 
நசுக்குவது

மாற்றுக் கருத்தாளர்களை
மிரட்டுவது
விரட்டுவது
கொலை செய்வது
 
அவ்வளவே
அரசியல்.

சாக்ரடீஸ் -

பாவம்

போர் யாருக்கு?

போர்
யாருக்கு நல்லது -

போரிடும் வீரர்களுக்கா?

இருக்காது

அவர்கள்
இறக்கலாம்

ஊனம் ஆகலாம்.

போர் வீரர்களின் 
குடும்பத்திற்காக?

இருக்காது 

அவர்களுக்கும் 
இழப்பு 
மட்டுமே.

நாட்டு மக்களுக்கா?

இருக்காது

அவர்களுக்கும் 
அழிவு 
மட்டுமே.

பின்
யாருக்காக? -

அதிகாரத்தைக் 
குவித்து

நானே ராஜா 
ஆக நினைக்கும்
அற்ப...

மையப்படுத்தல்

மையப்படுத்தல் -

ஓர்
இடத்தில்
குவியும்
அதிகாரம்.

மையத்திலிருந்து -

எதனையும்
அறிய முடியாது

எதனையும்
புரிய முடியாது

ஆட்டிவிக்கலாம்
மனிதர்களை

மனிதர்களின்
தேவை தீர்க்க முடியாது

ஆனால் -

மக்களாட்சியில்
தேர்ந்தெடுக்கப்படும்
பிரதிநிதி

அரியனை
ஏறுவதே

ஆசையாய்...

தீங்கு விளைவிக்காதே?

"முதலில், 
தீங்கு விளைவிக்காதே" 
மருத்துவர்களின்
ஹிப்போக்ரடிக் உறுதிமொழி

நலம் குறைந்து

நலமாகும் 
என எண்ணி

மருத்துவரிடம் சென்று
 
சோதனைகள்
பல செய்து

உடம்பைப்
புண்ணாக்கி...

மறந்துவிட்டார் —
மருத்துவர்

ஹிப்போக்ரடிக் உறுதிமொழி

முரணே இசைவாய்

முரண் இல்லா
ஓர் இயல்பாய்
இருப்பது அல்ல -

திருமண பந்தம்.

முரண் பட்ட
இருவர்

முரண்கள் களைந்து
இசைவுடன்
இயங்குவதே -

திருமண பந்தம்.

முரண்படுங்கள்
உங்கள் இணையுடன்

இசைவாய்
வாழ்வு
மலரட்டும்.

நெல் விளைய நெல்லே பலி

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -  

மூதுரை வாக்கு
உலக இயல்பு.

அது எப்படி
புல்லுக்குப் போகலாம்

நெல்லுக்கல்லவா
தேவை

என

நெல்லுக்கும் 
நீர் வராமல் 
தடுக்கும்

அரசின் 
கைரேகை, 
முகம்,
விழித்திரை 
வழி அடையாள
உறுதி
செயல்முறைகள் -

களை களைய

நெல்லே 

பலி.

வாய்தா… இல்லை!

சாவு 
வந்து விட்டது

செத்து தான் ஆக
வேண்டும்

வாய்தாக்கள்
கிடைக்காது

ஆம் -

அது என்ன

நம்முடைய

நீதிமன்றங்களா!

வாய்மை எனப்படுவது யாதெனின்?

வாய்மையே
வெல்லும்

வாய்மையின்
பொருள்
அதிகாரம்

என்றால் -

வாய்மையே

வெல்லும்

நம்புவீர்களா? சிந்திப்பீர்களா?

அவன் 
மனம் வைத்தால்தான் —

அவனைத் தரிசிக்க முடியும்…

தன்முயற்சியைத்
தடுக்கும்
மதங்கள்

தன்முயற்சி -

ஒருவனை
வளரச் செய்துவிடும்

ஒருவனை
உயரச் செய்துவிடும்

ஒருவனை
தானாக இயங்க வைத்துவிடும்

மதத்திற்கு
வேலை இல்லாமல் செய்து விடும்

எனவே -

அவன் 
மனம் வைத்தால்தான் —

அவனைத் தரிசிக்க முடியும்…
என
நம்பவைக்கும் மதம்.

நம்பினோர்
கெடுவதில்லை
இது
நான் மறை வாக்கு

நம்புவீர்களா? 

சிந்திப்பீர்களா?

மூடிய உணர்வுகள்

விடுமுறை நாட்களிலும்
பள்ளிகள்

அனைவருக்கும்
தெரிகிறது

கல்வித் துறை
கண்களை 
மூடிக் கொள்கிறது

தண்ணீர் வண்டிகளின்
அதீத ஹார்ன் ஒலி

அனைவருக்கும்
கேட்கிறது

போக்குவரத்துத் துறை
காதுகளை
மூடிக் கொள்கிறது

குப்பைகளின் துர்நாற்றம்
அனைவருக்கும்
துர்நாற்றமாய்

(மா)நகராட்சி பஞ்சாயத்து
மூக்குகளை
மூடிக் கொள்கிறது

மௌனமானது -

அரசு

செத்தது -

மக்களாட்சி

நாய் > மக்கள் ?

"தெரு நாய்களை 
கட்டுப்படுத்துங்கள்

விரட்டுகிறது

கடிக்கிறது" 

மக்கள்

"நாய் 
விரட்டத்தான் செய்யும்

நாய் 
குரைக்கத்தான் செய்யும்

நாய் 
எங்களை எல்லாம் 
கடித்ததே இல்லை"

என்றுமே
காரில் செல்லும்"
ஜீவகாருண்ய அன்பர்கள்

அரசும் 
எப்பொழுதும் போல்
ஜீவகாருண்ய அன்பர்கள்
பக்கமே!

மக்களா -

அது யார்?

நிர்வாக காரணங்களினால் ...

"மக்களின் பணத்தில்
சேவை செய்ய..."

"யாருக்கு?"

"மக்களுக்காகத் தான்
நம்புங்கள் மக்களே"

"நிர்வாக காரணங்களினால்...

மக்களுக்கான சேவை —
திடீரென மறுக்கப்படும்.

காரணம்?

நிர்வாக காரணங்களினால்..."

இதுவே -

வெளிப்படைத் தன்மை

இயங்கும் தன்மை

"நம்புங்கள் மக்களே
மக்களுக்காகத் தான்"

சுதந்திர நாட்டின் அடிமைகள்

அதிகாரம்
மக்களை 
அடிமையாகவே வைத்திருக்கிறது

அரசியல்
மக்களை 
அடிமையாகவே வைத்திருக்கிறது

சட்டம்
மக்களை 
அடிமையாகவே வைத்திருக்கிறது

மக்களாட்சி 
மக்களை 
அடிமையாகவே வைத்திருக்கிறது

வாங்கிவிட்டோம்
சுதந்திரம்...

உருவாக்கிவிட்டோம்
மக்களாட்சி!!!

சனி, 4 ஏப்ரல், 2026

தேர்தல்

ரோட்டில்
காரில் செல்லவதே
குற்றம் என

மக்கள்
என் அடிமைகள்

அவர்களுக்கு ஏன்
மரியாதை என

மரியாதையின்றி
விசாரிக்கும்
அதிகார வர்க்கம்

சாமாணிய மக்கள் 
கொண்டு செல்லும்
சில லட்சங்களைப்
பறிமுதல் செய்து
தேர்தல் பட்டுவாடாவை
தடுத்து நிறுத்திவிட்டேன் 
என்று மார்தட்டும்
அதிகார வர்க்கம்

இதுவல்லவோ
மக்கள் வதை பார்க்காமல்
அதிகாரமே நம் தோழர்கள்
என இச்செய்தியை
சிறப்பாய் வெளியிடும்
பத்திரிக்கைகள்.

மக்களுக்கு துணை
செத்துவிட்ட
மக்களாட்சி மட்டும்.

அதிகாரம்

அதிகாரம்
என்ன செய்யும் -

அத்துமீறும்

துன்புறுத்தும்

தவறு செய்யும்

உரிமை மீறும்

கொடுமைப் படுத்தும்

செய்ய வேண்டியதைக்
தவிர்த்து ...

அனைத்தையும்
செய்யும்.

விதைத்தது தான் விளையும்

பள்ளிக்கூடம்
என்ன செய்யும்?

கற்றுக் கொடுக்கும்.

எதை?

குழந்தைகள் -
பார்க்கும்
பார்த்ததைக் கற்கும்.

ஊரில்
ஒரு பள்ளிக்கூடம்

பள்ளிக்கு
செயல்படும் நேரம் 
உண்டு

பள்ளி
செயல்படும்!

குழந்தைகள் -
பார்க்கும்
பார்த்ததைக் கற்கும்.

பள்ளி வாகனம் -

குழந்தைகளை
நாள்தோறும்
பள்ளி ஆரம்பிக்கும் 
வேளை தாண்டியும்
கொண்டு வந்து சேர்க்கும்

ரோட்டில்
நிறுத்தப்படும்
போக்குவரத்துக்கு
இடையூறாக

இடையூறு என்றால் —
மிரட்டி, விரட்டும்
ஆசிரியர்கள்.

பள்ளிவேளை 
முடியும் முன்னே
குழந்தைகளை
நாள்தோறும்
வீட்டுக்கும் 
கொண்டு போய் சேர்க்கும்.

குழந்தைகள் -
பார்க்கும்
பார்த்ததைக் கற்கும்.

விதை ஒன்றை 
விதைத்து விட்டு...

விளையும்
எனக் காத்திருக்கும்...

விளையும் -

நல்லது?

வெள்ளி, 3 ஏப்ரல், 2026

சிந்திக்காதே

சிந்தியாது இரு 
மனமே

அறியாமையே 
ஆனந்தம்

அறியாமையே 
பேரின்பம்

சிந்தியாது இரு 
மனமே

மாற்றங்களை 
உருவாக்குவது 
நீ அல்ல

மாற்றங்கள் 
உன்னை கேட்டு   
மாறுவது அல்ல

சிந்தியாது இரு 
மனமே

மாற்றம்
நீ அல்ல 

வாழ்க்கை 
வாழ்வதற்கே

சிந்தியாது இரு 
மனமே

அதுவே 
அமைதி

அதுவே 
சாந்தம்

என்றும்  
யாருக்கோ
அடிமையாய்

சிந்தியாது இரு 
மனமே

ஆக்கிரமி

தன் இருப்பை
காண்பிக்க

ஆக்கிரமி -

ஒலியால்
ஒளியால்
இடங்களை

ஆக்கிரமித்தல் ஒன்றே —

உன்னை 
மறக்கச் செய்யாது,
உன்னை 
நினைவில் நிறுத்தும்.

நீ
மனிதன்

மனிதனாய்
இருக்காதே

மனித தன்மை
இழ

ஆக்கிரமி

போதித்தது -

மதம்.

திருட்டு — திருட்டுதான்

திருடுவது
என்றான பின்

யாரிடமிருந்து
எதை, எப்போது, எவ்வளவு
என்பதில் என்ன
பொருள்
இருந்து விடப்
போகிறது.

திருடுவதே
தவறு

எதை, எப்போது, எவ்வளவு
என்ன
மாற்றத்தைப்
தந்து விடப்
போகிறது.

திங்கள், 30 மார்ச், 2026

தமிழக அரசியல் மாற்றமா அல்லது ஒரு மாயையா? தமிழக வெற்றிக் கழகத்திற்கு அளிக்கும் வாக்கு ஏன் மக்களாட்சிக்கு எதிரானது?

நமக்குத் தேவையானது மக்களாட்சி; மன்னராட்சி அல்ல!

தமிழக அரசியல் களம் இன்று ஒரு பெரும் திருப்புமுனையில் நிற்கிறது. புதிய முகங்கள், புதிய கட்சிகள்—இவை எல்லாம் மாற்றத்திற்கான அறிகுறி என்று சொல்லப்படுகின்றன. ஆனால், நாம் ஒரு கேள்வியை முன்னிறுத்த வேண்டும்: இது மாற்றமா, அல்லது வெறும் மாயையா?

நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய அலை போலக் கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ரசிகனாக ரசிப்பதற்கும், குடிமகனாக வாக்களிப்பதற்கும் மாபெரும் வித்தியாசம் இருக்கறது. அந்த வித்தியாசத்தை நாம் அனைவரும் உணர வேண்டும்.

1. சினிமா கைதட்டல் – நிஜ வாழ்க்கைத் தீர்வா?

வெள்ளித்திரையில் கதாநாயகன் ஒரே வசனத்தில் உலகத்தையே மாற்றிவிடுவார். அந்த வினாடி வெளிப்படும் கைதட்டல்கள் ஆரவாரமானவை; ஆனால், நிஜ அரசியல் என்பது ஒரு காட்சியல்ல, அது பல கோடி மக்களின் வாழ்வாதாரம்.

பள்ளிகள், மருத்துவமனைகள், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு—இவை வெறும் வசனங்களால் தீர்க்கப்பட வேண்டியவை அல்ல; தீர்க்கக்கூடியவையும் அல்ல. திட்டமிடல், நிர்வாகம் மற்றும் பொறுப்புணர்வால் மட்டுமே இவை சாத்தியம். கைதட்டல்களுக்கும், நிஜ நிர்வாகத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வதே ஒரு வாக்காளனின் முதல் கடமை.

2. 'தலைவர்' என்பவன் கடவுளா?

ஒரு தலைவரை நாம் மதிக்கலாம்; ஆனால் அவரை 'கேள்விக்கு அப்பாற்பட்டவர்' என்று கருதுவது மக்களாட்சிக்கு சவக்குழி.

மன்னராட்சியில் மன்னரின் சொல் வேதவாக்கு; ஆனால் மக்களாட்சியில் மக்களின் கேள்வியே இறுதித் தீர்ப்பு.

எங்கு ஒரு தலைவர் தனது செயலை நியாயப்படுத்தக் கடமைப்பட்டவர் இல்லையோ, அங்கு மக்களாட்சி மரணிக்கிறது. தலைவர் என்பவர் தவறே செய்யாத கடவுள் அல்ல; தவறு செய்தால் தட்டிக்கேட்கப்படும் ஒரு பிரதிநிதி மட்டுமே.

3. ரசிகர் கூட்டமா? விழிப்புணர்வுள்ள குடிமக்களா?

இன்று விமர்சனங்களைச் சகித்துக்கொள்ளத் துப்பில்லாத அரசியல் சூழலில், ரசிகர் மன்றங்களின் அடிப்டையில் ஒரு கட்சி உருவாவது ஆபத்தானது. ரசிகன் "என் தலைவர் தவறே செய்யமாட்டான்" என்று கண்மூடித்தனமாக நம்புவான்; ஆனால், குடிமகன் "என் தலைவர் தவறு செய்தால் தட்டிக்கேட்பேன்" என்று உறுதி கொள்வான். தமிழகத்திற்குத் தேவை ரசிகர் பட்டாளம் அல்ல; தகுதியை ஆராயும் அறிவுப்பூர்வமான வாக்காளர்கள்.

4. ஆள்பவர்களா? அல்லது பிரதிநிதிகளா?

மன்னராட்சிக்கும் மக்களாட்சிக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்:

மன்னராட்சி: அதிகாரம் மேலிருந்து கீழே பாயும்; மக்கள் அடிபணிந்து கிடக்க வேண்டும்.

மக்களாட்சி: அதிகாரம் மக்களிலிருந்து மேலே செல்லும்; ஆள்பவர்கள் மக்களுக்கான வேலையாட்கள் (Representatives).

நாம் தேர்ந்தெடுப்பது நம்மை ஆளும் மன்னர்களை அல்ல; நம்முடைய குரலைப் சட்டமன்றத்தில் ஒலிக்கச் செய்ய வேண்டிய பிரதிநிதிகளை. நாம் ஆளப்படும் பொருட்கள் அல்ல; ஆள்பவர்களைத் தேர்ந்தெடுக்கும் எஜமானர்கள்!

புத்தகத்தின் அட்டைக்கு மயங்காதீர்கள்!

அழகான புத்தகத்தின் அட்டையைப் பார்த்து ஏமாந்துவிடாதீர்கள். அதன் உள்ளே இருக்கும் கதையின் தரம் தான் முக்கியம்.

சினிமா புகழ் என்பது கவர்ச்சிகரமான அட்டை; ஆனால் கொள்கை என்பது உள்ளே இருக்கும் வீரியமான கதை.

சினிமாப் புகழால் வரும் போதையைத் தள்ளி வைத்துவிட்டு, சிந்திக்கும் திறனைத் தீட்டுங்கள்.

சிந்திப்போம்!

கேள்விகள் கேட்போம்!

செயல்படுவோம்!

கேள்விகளே மக்களாட்சியின் சுவாசக் காற்று!

நாம் தேடுவது மன்னராட்சி அல்ல — மக்கள் நலன் காக்கும் உண்மையான மக்களாட்சி!

மக்களாட்சி மலர ஓட்டு போடுவோம்.

வெல்லட்டும் மக்களாட்சி