வெள்ளி, 3 ஏப்ரல், 2026

தேர்தல்

ரோட்டில்
காரில் செல்லவதே
குற்றம் என

மக்கள்
என் அடிமைகள்

அவர்களுக்கு ஏன்
மரியாதை என

மரியாதையின்றி
விசாரிக்கும்
அதிகார வர்க்கம்

சாமாணிய மக்கள் 
கொண்டு செல்லும்
சில லட்சங்களைப்
பறிமுதல் செய்து
தேர்தல் பட்டுவாடாவை
தடுத்து நிறுத்திவிட்டேன் 
என்று மார்தட்டும்
அதிகார வர்க்கம்

இதுவல்லவோ
மக்கள் வதை பார்க்காமல்
அதிகாரமே நம் தோழர்கள்
என இச்செய்தியை
சிறப்பாய் வெளியிடும்
பத்திரிக்கைகள்.

மக்களுக்கு துணை
செத்துவிட்ட
மக்களாட்சி மட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக