சிந்தியாது இரு
மனமே
அறியாமையே
ஆனந்தம்
அறியாமையே
பேரின்பம்
சிந்தியாது இரு
மனமே
மாற்றங்களை
உருவாக்குவது
நீ அல்ல
மாற்றங்கள்
உன்னை கேட்டு
மாறுவது அல்ல
சிந்தியாது இரு
மனமே
மாற்றம்
நீ அல்ல
வாழ்க்கை
வாழ்வதற்கே
சிந்தியாது இரு
மனமே
அதுவே
அமைதி
அதுவே
சாந்தம்
என்றும்
யாருக்கோ
அடிமையாய்
சிந்தியாது இரு
மனமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக