அவன்
மனம் வைத்தால்தான் —
அவனைத் தரிசிக்க முடியும்…
தன்முயற்சியைத்
தடுக்கும்
மதங்கள்
தன்முயற்சி -
ஒருவனை
வளரச் செய்துவிடும்
ஒருவனை
உயரச் செய்துவிடும்
ஒருவனை
தானாக இயங்க வைத்துவிடும்
மதத்திற்கு
வேலை இல்லாமல் செய்து விடும்
எனவே -
அவன்
மனம் வைத்தால்தான் —
அவனைத் தரிசிக்க முடியும்…
என
நம்பவைக்கும் மதம்.
நம்பினோர்
கெடுவதில்லை
இது
நான் மறை வாக்கு
நம்புவீர்களா?
சிந்திப்பீர்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக