விடுமுறை நாட்களிலும்
பள்ளிகள்
அனைவருக்கும்
தெரிகிறது
கல்வித் துறை
கண்களை
மூடிக் கொள்கிறது
தண்ணீர் வண்டிகளின்
அதீத ஹார்ன் ஒலி
அனைவருக்கும்
கேட்கிறது
போக்குவரத்துத் துறை
காதுகளை
மூடிக் கொள்கிறது
குப்பைகளின் துர்நாற்றம்
அனைவருக்கும்
துர்நாற்றமாய்
(மா)நகராட்சி பஞ்சாயத்து
மூக்குகளை
மூடிக் கொள்கிறது
மௌனமானது -
அரசு
செத்தது -
மக்களாட்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக