திங்கள், 6 ஏப்ரல், 2026

மூடிய உணர்வுகள்

விடுமுறை நாட்களிலும்
பள்ளிகள்

அனைவருக்கும்
தெரிகிறது

கல்வித் துறை
கண்களை 
மூடிக் கொள்கிறது

தண்ணீர் வண்டிகளின்
அதீத ஹார்ன் ஒலி

அனைவருக்கும்
கேட்கிறது

போக்குவரத்துத் துறை
காதுகளை
மூடிக் கொள்கிறது

குப்பைகளின் துர்நாற்றம்
அனைவருக்கும்
துர்நாற்றமாய்

(மா)நகராட்சி பஞ்சாயத்து
மூக்குகளை
மூடிக் கொள்கிறது

மௌனமானது -

அரசு

செத்தது -

மக்களாட்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக