திங்கள், 13 ஏப்ரல், 2026

பழையதுக்கு திரும்ப…

காட்டை
அழித்து திருத்தி
ஊர் செய்தான்

நாட்டைக் கைபற்றி

தன் அரண்மனை
தன் கோவில்
ஆக்கினான் 

மறுபடியும்
மற்றொருவன்

நாட்டைக் கைபற்றி

தன் அரண்மனை
தன் கோவில்
ஆக்கினான் 

இப்படியே ...

தற்போது
பழையது திரும்ப 
வேண்டுமாம்

அந்தக்
கோயிலாய்
மாற்ற வேண்டுமாம்

போராட்டம்!
போராட்டம்!!

பழையது திரும்ப 
வேண்டும் எனில்

காடாய் தானே
ஆக்க வேண்டும்

அது தானே -

நியாயம்
தர்மம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக