Wednesday, November 14, 2018

நான் யார்! நானா?

நான்
என் எச்சங்கள்
அல்ல!

என் எச்சங்கள்
கொண்டு‍
என்னை அறியாதீர்கள்!

என் எச்சங்கள்
கொண்டு‍
என்னைகண்காணிக்காதீர்கள்

எச்சங்கள்
நான் விட்டுச் செல்பவையே

ஆனால்
நான் அல்ல
என் எச்சங்கள் !

பொழுது‍ போகவில்லை!

பொழுது‍ போகவில்லை
ஆனாலும்
ஒவ்வொரு‍ நொடியும்
நகரத் தான் செய்கிறது‍
பொழுது‍ போகவில்லை
ஆனாலும்
நொடிகள் நகர
நிமிடங்கள்
நிமிடங்கள் நகர
மணிகள்
மணிகள் நகர
நாட்கள்
நாட்கள் நகர
ஆண்டுகள்
என அனைத்தும்
நகரத்தான் செய்கிறது‍
ஆனாலும்
பொழுது‍ போகவில்லை!

#நானும்

ஒன்றும் ஒன்றும்
எப்போதும் இரண்டல்ல!

எப்போதும் இரண்டல்ல
என்பதால்
ஒன்றும் ஒன்றும்
இரண்டு‍
என்பதும் பொய்யல்ல!

பொய்யில்லை என்பதால்
உண்மையும் அதுவல்ல

உண்மையும் அதுவல்ல
என்பதால்
அது‍ பொய்யும்மில்லை

  ஒன்றும் ஒன்றும்
 ..................

இக்கணத்தில் வாழ்தல்

இக்கணத்தில் வாழவே
ஆசைப்படுகிறேன்!

தற்போதைய பசி
நேற்றைய
பசியின் கொடுமையை
ஞாபகப்படுத்துகிறது‍!
நாளைய
பசியின் கொடுமையை
ஞாபகப்படுத்துகிறது‍!
ஆனாலும்
இன்றைய பசியின்
வலியுடன்
இக்கணத்தில் வாழவே
ஆசைப்படுகிறேன்!


வாழ்க்கை முரண்

சிறு‍ குழந்தைகளை
பார்க்கும்
ஓவ்வொரு‍ முறையும்

சிறு‍ வயதில்
உயரம் அளக்க
கோடுகளிட்டு‍
கோடுகள் உயரும் தருணம்
தந்த மகிழ்ச்சி

வளர்ந்த பின்
ஏங்க வைக்கிறது‍
வளராமலே இருந்திருக்கிலாம்
குழந்தையாய்!

தற்கொலை

ஒவ்வொரு‍ முறையும்
உன்னை அடைய
முயற்சித்து‍

ஒவ்வொரு‍ முறையும்
தோல்வி அடைந்து‍ ....

வாழ்கிறேன்!

 

அரசு‍

கோவணத்தையும் பறித்துவிட்டு‍
நிர்வாணத்திற்கு‍
விதித்தது‍ வரி!

தன் அடையாளம் தேடுதல்

அவளும்
அவள் பெயர்
சொன்னதில்லை!

நானும்
அவள் பெயர்
கேட்டதில்லை!

நானும்
என் பெயர்
சொன்னதில்லை!

அவளும்
என் பெயர்
கேட்டதில்லை!

இருவரும்
ஓர் அறையில்
பழகினோம்...!
பழகிறோம்..!
பழகுவோம்..!

பெயர் தெரியும் வரை!


விடாது‍ கருப்பு

என்னை ஏன்
பின் தொடர்கிறாய்
உன் கேமிரா கண்களால்?
நான் உன்றன் காதல் அல்ல!

என் தகவல் கொண்டு‍
ஏன்னை ஏன் ஆராய்கிறாய்
நான்  என்னை உனக்குத் தரவும் இல்லை!

பேசாதே!
கேட்காதே!
கேளாதே!
என்கிறாய்
நான் குரங்கும் அல்ல

இப்படி‍ இவ்வாறு‍ மட்டுமே
செய் என்கிறாய்
நான் உன் அடிமை அல்ல

பின் நான்?

ஞாபகம் வந்துவிட்டது‍
நான்
இந்நாட்டின்
சுதந்திர குடிமகன்!

அனைத்தும் அறிந்தவன்

குழந்தையின் அழுகை
தாயுக்கு‍ப் புரிந்தது‍

காதலியின் கண்ணசைவு
காதலனுக்குப் புரிந்தது‍

தந்தையின் கோபம்
மகனுக்கு‍ புரிந்தது‍

மொழி தெரியா சைகையில்
தேவைகள் புரிந்தது‍

அனைந்தும் படைத்தவனாம் கடவு ள்
அவனுக்கு‍
ஒரு‍ மொழி தான்
தெரியுமாம்!

இரவல்

வீட்டினுள் நான்
நிலவோளியில்!

ஞானம்

புத்தனுக்கு‍ போதி மரம்
எனக்கு‍ மா மரம்
அடித்த காற்றில்
கிடைத்தன மாங்காய்கள்
எனக்கு‍ ...