Wednesday, November 14, 2018

விடாது‍ கருப்பு

என்னை ஏன்
பின் தொடர்கிறாய்
உன் கேமிரா கண்களால்?
நான் உன்றன் காதல் அல்ல!

என் தகவல் கொண்டு‍
ஏன்னை ஏன் ஆராய்கிறாய்
நான்  என்னை உனக்குத் தரவும் இல்லை!

பேசாதே!
கேட்காதே!
கேளாதே!
என்கிறாய்
நான் குரங்கும் அல்ல

இப்படி‍ இவ்வாறு‍ மட்டுமே
செய் என்கிறாய்
நான் உன் அடிமை அல்ல

பின் நான்?

ஞாபகம் வந்துவிட்டது‍
நான்
இந்நாட்டின்
சுதந்திர குடிமகன்!

No comments:

Post a Comment