Monday, February 13, 2012

மகிழ்வுடன் காணாமல் போகுதல்

நான்
உன் உள்
தொலைந்து‍ போனேன்
நீ
உன் உள்
கண்டுப் பிடித்துக் கொடுததர்ய்
நீ
நானாக இருக்க
நினைக்கிறாய்
நான்
உன் உள்
தொலைந்து‍ போகவே
விரும்புகிறேன்
மீண்டும்
என்னை கண்டுப்பிடிக்காதே
என்றும் உன்னுடன்!

இக் கணத்தில் வாழ்தல்

உன்
திருமண அழைப்பிதழில்
என்
பெயர் இல்லை எனறர்லும்
உன்றன்
பெயரை பார்த்துக் கொண்டே …!

பெரிதினும் பெரிது‍

காதல்
ரசிக்க சொல்லிக் கொடுத்தது‍
பேசக் கற்றுக் கொடுதத்து‍
சிரி்க்க வைத்தது‍
சிந்திக் தூண்டியது‍
என்னை உணரச் செய்தது‍
காதல் பெரிது‍ தான்
இத்தகைய
காதலை உருவாக்கிய
நீ…!

வாரா அழைப்பு

காலை உன் குரல்
கேட்டு‍ எழுகிறேன்
யார் என்னை அழைத்தாலும்
உன் குரலிலேயே அழைப்பு
நினைவூட்டல்களும்
உன் குரலிலே
ஆனால்
உன் அழைப்பு மட்டும் ....!?

சகல கலா கண்

கண் பேசும்
வாய் காணுமோ?
கண் நுகர்ச்சியறியும்
மூக்கு‍ காணுமோ?
கண் சுவையறியும்
நாக்கு‍ காணுமோ?
கண் கவரும்‌
கைகள் காணுமோ?

போனாளே?

என் செல்லிலும்
உன் படம்!
என் கணிணியிலும்
உன் படம்!
என் படத்தின் அருகே மட்டும்
ஏங்கே போனாய்…!?