Tuesday, July 2, 2019

சரவணன் சந்திரன் எழுதிய ஐந்து முதலைகளின் கதை


வெளியீடு‍ உயிர்மை பதிப்பகம், 
விலை ரூ 150 பக்கங்கள் 168


அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் அடியாட்கள் வரையிலான பங்கிடுகள்,   வியாபாரம் என்ற பெயரில் அடிக்கப்படும் கொள்ளைகள், சுரண்டல்கள் இது‍ தான் கதை.
கதை சொல்லி‍ இங்கு‍ அடிக்கப் போகும் கொள்ளைக்கு‍ மன்னிக்கவும் வியாபாரத்திற்கு‍ தகுந்த சூழல் இல்லாததால் அவன் தைமூருக்கு‍ செல்கிறான் வியாபாரத்திற்காக. கொள்ளைக்காக என்றும் சொல்லிக் கொள்ளலாம்.
கொள்ளையடிக்க கூட்டணி சேர்ப்பதும், அதிகாரத்தில் உள்ளவர்களுடன் நட்புக் கொள்ளுதல், ஏமாற்று‍தல், ஏமாறுதல், வஞ்சனைகள், குடி, பெண்கள் என அனைத்தும் கதையுனுள் வந்துவிடுகிறது. ஆனாலும் முதலை என்ற படிமம் கண்களுக்கு‍ வராமல் கதை கதையாகவே மட்டுமே அழகாக செல்கிறது. கடைசியில் அங்கு‍ ஒன்றும் செயல் படுத்த முடியாத காரணத்தினால் தாய் நாட்டிற்கு‍ திரும்புதல் நடக்கிறது. அதற்குள் இங்கு‍‍ அவர்களுக்கு‍ சாதகமான சூழல் மாறிவிடுகிறது‍. எனவே இங்கு‍ வியாபாரத்தை இங்கே சிறப்பாக செயல் படுத்தி பணத்தினை கைப்பற்றிக் கொள்கிறார்கள்.
கதை எவ்விடத்திலும் தொய்வில்லாமல் செல்வதும், கதையினை ஒரு‍ சாகசாமாக சொல்வது‍ தான் நாவலின் சிறப்பு.

ஷ்ரவண் எழுதிய சிறகடிக்கும் சிந்தனைகள்




விலை ரூ 50
வெளியீடு‍ : கீதம் பதிப்பகம், K-702, பூர்வா ஸ்வான்லேக், OMR கேளம்பாக்கம், சென்னை 600003
அருமையான உவமைகள், மென்மையான வார்த்தைகள், கற்பனை மற்றும் இடித்துரைக்கும் வார்த்தைகள் கொண்டு கவிதைகள் இயற்கையாய் வெளிப்படுகின்றன. ஏக்கம், காதல், காதல் தோல்வி, நட்பு, வேதனை, எள்ளல் போன்ற அருமையான உணர்வுகளின் பதிவுகளாய் கவிதைகள் அமைந்துள்ளன. சில கவிதைகள் மயக்கத்தின் வெளிப்பாடாய், காதல் போதையின் உச்சக்கட்டமாய் வெளிவந்துள்ளன. பெண் ஆதிக்கத்தை எதிர்த்தும் சுதந்திரமான சிந்தனைகளுடன் வீரியமான கவிதைகள் உள்ளன. கவிதைகள் புகைப்படமாய் மாறும் அதிசயம் கவிதைகளில் மறைந்து உள்ளன. ஒவ்வொரு கவிதைகளிலும் வார்த்தைகள் அழகாய் உணர்வாய் அமைந்து உள்ளன. வார்த்தை பொறுக்கி என்ற பட்டம் கவிஞருக்குக் கொடுக்கலாம்.