Tuesday, July 2, 2019

ஷ்ரவண் எழுதிய சிறகடிக்கும் சிந்தனைகள்




விலை ரூ 50
வெளியீடு‍ : கீதம் பதிப்பகம், K-702, பூர்வா ஸ்வான்லேக், OMR கேளம்பாக்கம், சென்னை 600003
அருமையான உவமைகள், மென்மையான வார்த்தைகள், கற்பனை மற்றும் இடித்துரைக்கும் வார்த்தைகள் கொண்டு கவிதைகள் இயற்கையாய் வெளிப்படுகின்றன. ஏக்கம், காதல், காதல் தோல்வி, நட்பு, வேதனை, எள்ளல் போன்ற அருமையான உணர்வுகளின் பதிவுகளாய் கவிதைகள் அமைந்துள்ளன. சில கவிதைகள் மயக்கத்தின் வெளிப்பாடாய், காதல் போதையின் உச்சக்கட்டமாய் வெளிவந்துள்ளன. பெண் ஆதிக்கத்தை எதிர்த்தும் சுதந்திரமான சிந்தனைகளுடன் வீரியமான கவிதைகள் உள்ளன. கவிதைகள் புகைப்படமாய் மாறும் அதிசயம் கவிதைகளில் மறைந்து உள்ளன. ஒவ்வொரு கவிதைகளிலும் வார்த்தைகள் அழகாய் உணர்வாய் அமைந்து உள்ளன. வார்த்தை பொறுக்கி என்ற பட்டம் கவிஞருக்குக் கொடுக்கலாம்.

No comments:

Post a Comment