Sunday, May 23, 2021

சங்கீதா எழுதிய நினைவுத்தாள்கள்

 


வெளியீடு‍ : தருண்கவின் பதிப்பகம்,122/44, பூசால கெங்கு‍ தெரு, A3, மகாலெட்சுமி அடுக்ககம், முதல் தளம், ஏழும்பூர் சென்னை - 600 008.

பக்கங்கள் : 96

விலை ரூ 80

கவிஞர் வெவ்வேறு‍ கால கட்டத்தில் எழுதிய கவிதைகளைக் கால வரிசையின்றி தொகுத்துள்ளது‍ பக்கங்கள் மாறிய நினைவுத் தாள்களாய் உள்ளது.

கவிதை தலைப்புக்கும் பாடும் பொருளுக்கும் முரண்கள், கவிதைகளில் சிலவற்றில் ஒலி நயத்திற்காக வலிந்து‍ திணிக்கப்பட்ட சொற்கள் ஆனாலும் எவற்றிலும் கவித்துவம் விட்டு‍ விலகாமல் இரு‍ப்பது‍ சிறப்பு.

பெண்மையை மென்மையாய் கவிதைகளில் கொண்டு‍ வந்துள்ளார். உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகள் மிகச் சிறப்பாய் அமைந்துள்ளன.அந்த உணர்வுகள் கவிஞரின் நேரடி‍ வாழ்க்கை அனுபவங்களாக மட்டுமே தெரிகிறது. அங்கால்யிப்புகளை, நக்கல்களை கதை கவிதையாய் தந்து‍ இருப்பது‍ ஒரு‍ வித்தியாசமான வாசிப்பு அனுபவம்.

இன்றைய காலகட்டங்களில் வெளி வந்துள்ள கவிதை நூல்களில் கவிதைகள் கவிதையாய் இருக்கும் விரல் விட்டு‍ எண்ணக் கூடிய புத்தகங்களில் இந்த இந்தப் புத்தகமும் அடங்கும். இப் புத்தகத்தை வாசிக்கும் போது‍ கவிதை அனுபவம் கிடைக்கும் என்பது‍ உறுதி.

 

Monday, May 17, 2021

இரா. சிவசித்து எழுதிய உவர்

 


வெளியீடு‍ : மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453 மின்னஞ்சல் : manalveedu@gmail.com

விலை ரூ 150

உவர் இதன் பொருள் உப்புத் தன்மை, உப்புச் சுவை, உரைப்பவர் என்பவையாகும். இனிமை என்ற பொருளும் உண்டு. இந்த உப்பின் சுவை உடம்பில் இருக்கும், பேச்சில் இருக்கும், உள்ளத்தில் இருக்கும், நிலத்தில் இருக்கும்.

சோத்துல உப்பு போட்டுத் தானே சாப்பிடுகிறாய் என்று‍ தன்உணர்ச்சியை குறிப்பிட்டுச் சொல்லும் போன்ற சொற் தொடர்களும் உண்டு. இந்த தன்உணர்ச்சி வந்து‍ சிந்தனை எவ்வாறு‍ எல்லாம் சென்று‍ தன்தேவைத் தொலைய இருக்கும் நேரத்தில் சிவனு‍க்கு‍ முருகன் செய்த ஞானத் தெளிவு போலச் சரியான நேரத்தில் கிடைத்து‍ குறிக்கொள் நோக்கிச் செலுத்துவது‍ "வௌம்" கதை.

English is a funny language. ஆம் ஆனால் அந்த Fun யாருக்கு‍ என்ற விடை தான் கதை. English எப்படி‍ பள்ளியில் சொல்லித் தரப்படுகிறது, மாணவர்கள் அதனை எப்படிப் பார்க்கிறார்கள் என்ற Funஐ Punஆக சொல்லும் கதை.

நாய்களை பற்றி 10 பக்கங்களுக்கு‍ கட்டுரை எழுதிய கதை ஆசிரியர், தனக்குத் தெரிந்த அனைத்தையும் கதையில் தேவையே இல்லை என்றாலும் கொண்டு‍ வருவேன் என்பது‍ போல் இல்லாமல் "வளயம்" கதை கதையாகவே இருப்பது‍ உணவில் உப்பு எவ்வளவு இருக்க வேண்டுமோ அவ்வளவே இருப்பது‍ …!

உள்ளம் தன் தவறு‍ என்று‍ நினைத்து‍ உறைந்து‍ இருக்கும் போது‍ வாழ்க்கையின் உண்மை தன் தவறினால் பாதிக்கப்பட்டவர் சொல்லிய சொல் உறைந்து‍ இருத்தலிலிருந்து விடுபடச் செய்தது‍ உப்பை நீர்த்துப் போகச் செய்யும் நீர் போல இருக்கிறது‍ "உறைதல்" கதை.

நம்மை சுற்றிப் பல செயல்கள் நமக்குப் புரியாமலேயே, நமக்குப் தெரியாமலே நடந்து‍ கொண்டே இருக்கும்‍. ஒருவரின் இறப்பு ஒவ்வொருவரு‍க்கும் வெவ்வேறான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது‍. அந்த வலியினை மற்றும் பழைய ஞாபகங்களை அந்த வலியுடன் போகட்டும்‍ போ என்ற விரக்தியுடன் முன் காலகட்டத்தில் இருந்தவருடன் பகிர்ந்து‍ கொள்வது‍ "உவர்" கதை.

மனித உள்ளம் புரியாத புதிர். அந்த புதிர் புதிராக இருக்கும் போது‍ இருக்கும் பார்வை. அந்த புதிர் அவிழ்ந்த பின் மாறும் பார்வை, அந்த புரிதலிலே உள்ளத்தைத் தொலைத்து‍ விடும் செயல் என உவர்‌பின் பல தன்மையைக் கதைப்பது‍ "பிரில்லு‍ பாவட".

வாழ்க்கையை வாழ்ந்து‍ தான் ஆக வேண்டியது‍ ஆகி விடுகிறது. உப்பு சப்பு இல்லாமல் பல நேரங்களில் காற்று‍ அடிக்கும் பக்கம் போகும் ஆளில்லா ஓடம் போல வாழ்க்கை செல்லும் போது‍ அவ்வப்போது‍ விழும் காட்டுப் பூ போல் கிடைக்கும் மகிழ்ச்சியில் சென்று‍ கொண்டு‍ இருக்கும் போது‍ தீடீ‍ர் என்று‍ கிடைத்த ஞானம் வாழ்க்கைக்கு‍ உப்பு சேர்த்து‍ விட்டது‍ போன்றது‍ "விடியல்" கதை.

காலம் – நிகழ் காலம், இறந்த காலம், வருங்காலம் இதில் நிகழ் காலத்தில் பயணிக்கும் போது‍ வருங்காலத்திற்கும் இறந்த காலத்திற்கும் தாவ முடிகிறது. இந்த ஞாபகங்கள் பயம், குழப்பம் எனப் பலவற்றைத் தருகிறது. முதன் முதலில் சமையல் செய்யும் போது‍ எவ்வளவு உப்புப் போட வேண்டும் என்ற குழப்பத்தை போல. இந்தக் குழப்பத்தின் நடுவே ஒரு‍ பொறி தட்டும். காலம் தான் இதனை உணர்த்தியது‍ போல ஒரு‍ தெளிவு கிடைக்கும். இதனைச்‍ சொல்வது "கெவி"‍.

 

Tuesday, May 11, 2021

கி. ராஜநாராயணன் எழுதிய மிச்சக் கதைகள்

 

கதைகளில் ஏது‍ மிச்சம். கதைகள் எப்போதும் இருந்து‍ கொண்டு‍ தானே இருக்கும். அது‍ என்ன மிச்சக் கதைகள் என்ற ஐயத்துடன் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தால் கி.ரா. பக்கங்களில் நிறைந்து‍ இருக்கிறார். நிறைந்து‍ இருப்பது‍ கி.ரா.வின் எழுத்து‍ அல்ல. பக்கங்களில் நிறைந்து‍ இருப்பது‍ கிராவின் புகைப்படங்கள் வித விதமாய். கி.ரா. என்ற பெயரை துணை கொண்டு‍ புதுவை இளவேனில் தன் புகைப்படத் திறமையைக் காட்டிக் கொண்டு‍ இருக்கிறார். புதுவை இளவேனிலுக்கு‍ தன் புகைப்பட திறமையைக் காட்ட வேண்‌டும் என்றால் புகைப்பட சமந்தமாக அவரே புத்தகம் போட்டுக் கொள்ள வேண்டும், அதனை விடுத்து‍ கிராவின் எழுத்துக்குள் ஒட்டி‍ உறவாடி‍‍ தன்னை காட்டிக் கொள்ளுதல் வாசகனை வஞ்சிப்பதாகும்.

ஒரு‍ புத்தகம் அதன் குறிக்கோளை விட்டு‍ விலகாமல் இருக்க வேண்டும். ஆனால் இந்த புத்தகத்தில் வரும் படங்கள் கதைக்குத்‍ துணை புரியும் படங்களாக இல்லை. அவைகள் வேறு‍ குறிக்கோளை நிறைவேற்ற இட்டுக் கட்டப்பட்ட படங்களாய் மட்டுமே தெரிகிறது. தனி மனித வழிபாடு‍, கா(சு)ற்று உள்ள போதே தூற்றிக் கொள் என்பன‍ தான் குறிக்கோளாக இருக்க முடியும்.

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்

ஆனால் இங்கு‍ புல், ஒட்டுண்ணி(Parasite) போல் நெல்லுக்குச்‍ சிறிதும் இடம் கொடுக்காமல் முழுவதையும் எடுத்துக் கொண்டு‍ உள்ளது.

ஆக மெத்தத்தில் கி.ரா. என்ற brand விலை போகிறது.

விலை ரூ 300

104 பக்கங்கள்

வெளியீடு‍ : அன்னம், மனை எண்‌ 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 007.