கடந்த காலம்
கடந்தபோனது
எனப் புரிய வைத்தாய்
போனதை
பிடிக்க முடியாது
என உணர வைத்தாய்
வருங்காலம்
உறுதி அற்றது
என காண வைத்தாய்
வருவது
அறிந்துகொள்ள முடியாது
என உள்வாங்க வைத்தாய்
நிகழ் காலம்
இன்னும் முற்றாதது
எனத் தெளிய வைத்தாய்
நிகழ்வது
ஒன்றே நாம் நடத்துவது
என தெரிய வைத்தாய்
எக்காலமும் நீயேன இருக்கும்
என்னை
இக்காலத்தில் இருக்க வைத்தாய்
No comments:
Post a Comment