Monday, March 23, 2026

செயலே பெயர்

நான்
எழுதிய
கவிதை நூலுக்கு
உன் பெயர்
சூட்ட விரும்பினேன்.

சூட்டினேன்...

நீ
செய்த
செயலையே!

காதல் வகுப்பு

நீ
ஏதோ ஏதோ
சொல்லிக்
கொடுக்கிறாய்
எனக்கு.

சிறப்பாகவே
கற்றுக் கொள்கிறேன்
உன்னிடம்.

ஆனால் -

நீ
எடுக்கும்
வகுப்புகளுக்கு
நான்
வைத்த பெயர்...

காதல்.

சிறந்த சிந்தனை

சிறப்பான 
சிந்தனைகளையே
கொள்ள வேண்டும்
என்கிறார்கள்
பெரியோர்கள்.

அதனால் -

நான்
சிந்திக்கிறேன்...

உன்னை
மட்டும்.

கனவல்ல…

என்னைப்
பார்த்து
கை அசைத்தாய்!

என்
அருகே
வந்தாய்!

என்
கையோடு கை
கோர்த்தாய்!

என்னை
கட்டிப்
பிடித்தாய்!

எனக்கு
முத்தம்
தந்தாய்!

என் 
கனவில்
என்றேன் 
அவளிடம்

சிறு புன்னகையோடு
சொன்னாள்

அது
கனவல்ல...

ராணி

நீயே
ராணி

எங்கள்
ராணி

நாங்கள்
உன் 
குடிமக்கள்

எங்கள்
தேவையறிந்து
தீர்த்து வைப்பது
உன் கடமை

அதனால் -

நீயே
எங்கள்
ராணி

மூதுரை பொய்யாக்கினாள்

காண மயிலாட,
கண்டிருந்த வான்கோழி —

மூதுரை சொல்லை
பொய்யாக்கியவள்
நீ.

நீ செய்யும்
செயலைக் கண்டு,

செயலில் இறங்கி
மேம்பட்டோம்.

உன்னைக் கண்டு
அறிவடைந்து —

வெற்றியானோம்
நாங்கள்.

Thursday, March 19, 2026

மெளனமாகிய சட்டம்

"தூங்கி
பல ஆண்டுகள்
ஆகி விட்டன"
நான்.

"ஏன்?"
அவள் பதற்றத்துடன்.

"வழிபாட்டுத் தலங்களில்
கட்டுக்கடங்காத ஒலி"
நான்.

"நம்
அரசியலமைப்புச் சட்டம்
தூங்குவதற்கான உரிமையைத்
தருகிறது.
புகார் செய்ய
வேண்டியதுதானே"
அவள்.

"சட்டம்
அவர்களிடம்
செல்லாது"
நான்.

சட்டம்
மெளனமானது.

அவள்
மூர்ச்சையானாள் -

சட்டம் 
செத்துவிட்டதோ 
என்று.

என்னை அறிந்தேன்

நான் -

பறக்கக் தெரியாத
பறவையாய்

நீந்தத் தெரியாத
மீனாய்

பாயத் தெரியாத 
புலியாய்

பாடத் தெரியாத 
குயிலாய்

இருந்தேன்
உன்னைக் 
காணும் வரை

உன்னைக் 
கண்டேன் 

என்னை 
அறிந்தேன்

உன்னுள் 
தொலைந்தேன்.

ஒன்று

வானில்
நட்சத்திரங்களை
ஒன்று
இரண்டு
மூன்று
...
...
...
...
ஆயிரத்தி பத்து
அவள்
வந்தாள்
ஒன்று
என 
எண்ணி முடித்தேன்.

பார்வை ≠ உண்மை

"நீ
மிகப் மிகப்
பெரியவள்".

"சரி"
அவள்.

"தலைக்கனம்?"

"இதில் என்ன
தலைக்கனம்?"
அவள்.

"நீ
மிகப் மிகப்
பெரியவள் என்று 
நம்புகிறாய் அல்லவா!"
நான்.

"நீ
மிகப் மிகப்
பெரியவள் 
என்னைப் பற்றி
உன் கருத்து.

நீ
கருத்து சொன்னாய்
அந்தக்
கருத்தைக் கேட்டுக் கொண்டேன்
அவ்வளவே"
அவள்

"புரியவில்லை"
நான்.

"யார் என்றாலும்
யார் பற்றியும்
கருத்து கூறலாம்

அது
உண்மையா?
பொய்யா?
என ஏன்
ஆராய வேண்டும்"
அவள்.

திகைப்பில்
வியப்பில்
நான்.

எல்லையற்றவன்

"உன்னை
வரையப் போகிறேன்"
அவள்.

ஆசையாய்
தலையாட்டினேன்.

என்னை -

நிற்க வைத்தாள்.

ஓவியப் பலகையில்
வரைய ஆரம்பித்தாள்...

"முடிந்தது
பார்க்க வா!"
அவள்.

சென்றேன்.

பார்த்தால்
வெறும்
வெள்ளை தாள் ...
ஓவியம்
ஏதுமின்றி.

என்ன இது?
என்ற
முக அசைப்பில்
அவளைப் பார்த்தேன்.

அவள்
சலனமின்றி -

"நீ
எல்லையற்றவன்
தாளுக்குள் 
அடங்கவில்லை

நீ
வெள்ளை மனம் 
படைத்தவன்
வண்ணங்கள்
ஏதுமில்லை"

என்று சொல்லி
கலகலவென
பலமாகச்
சிரிந்தாள்.

அந்தச்
சிரிப்பில்
நான்
...

சொற்கள் நீ

"கவிஞனா?"
அவள்.

"இல்லை"
நான்.

"கவிதைகள் எழுதுகிறாயே"
அவள்.

"கவிதை
எழுதுபவர்கள் 
எல்லாம் கவிஞர்களா?"
நான்.

"இருக்கட்டும்...

என்னைப்
பற்றி கவிதை
எழுது."
அவள்.

"முடியாது"
நான்.

"ஏன்?"
அவள்.

"என்
சொற்கள்
எல்லாம்
நீயாகி விட்டன."
நான்.

அவள்
செல்லமாய்
என் கண்ணத்தில்
முத்தமிட்டுச்
சென்றாள்.

உவமைக்கு அப்பால்

உவமையோ
உருவகமோ
இல்லாமல்
என்னைப் புகழ்
என
அவள்
கேட்டாள்.

நீ!
என்றேன்.

Tuesday, March 17, 2026

விதிகளை மீறும் அவள்

என்னை
தன்னிடம்
ஈர்த்து
புவியிர்ப்பு விசையை
பொய்யாக்கியவள்.

அவளாகி
நிற்கும்
என்னை
காந்தம் கவர் விசையை
காணாமலாக்கியவள்.

காதலை
என்னிடம்
பொழிந்து
நீயூட்டனின் மூன்றாம் விதியை
இல்லாமலாக்கியவள்..

உண்மையை
பொய்யாக்குபவள்

பொய்யை
உண்மையாக்குபவள்

என் அவள்.

காற்றாய் அவள்

காற்று
அலைகளைத்
தள்ளுவது போல

காற்று
மேகங்களை
நகர்த்துவது போல

காற்று
கிளைகளைத்
அசைப்பது போல

காற்று
தூசுகளை
பறக்கவைப்பது போல

நான் -

போகும் வழி 
தொலைந்து

செய்வது 
அறியாது

தவிக்கையில்

என்னைத்
தள்ளுபவள் 
அவளே!

உனக்காக எல்லாம்

கடற்கரை மணல் கூட 
உன் கால்தடம் 
பதியாதவாறு 
உன் மெல்லிய பாதத்தைப்
தாங்கிக் கொள்கிறது.

காற்று கூட 
நீ மூச்சு விட 
சிரமப்படாவண்ணம்
அதுவே உள் சென்று 
மென்மையாய் வெளியேறுகிறது.

இந்த பூமி 
நீ நடந்து 
உன் கால்கள் வலிக்காதபடி  
தானே சுற்றி 
நீ செல்லும் இடத்தை
உன் காலடிக்கு
கொண்டு வருகிறது.

நீ போதுமே ...

உன் புன்னகை
ஒன்றே போதுமே
இன்றைய நாளை 
இனிமையாய் ஆக்கிட .

நீ 
என்னருகே இருப்பது 
மட்டும் போதுமே
நாளையை எதிர்கொள்ள.

நீ
நேற்றிருந்த 
உன் நினைவுகள்
மட்டும் போதுமே
மகிழ்ச்சியை
மீட்டெடுத்துக்கொள்ள.

நதியாகி நீ

அன்று 
ஒரு நாள் 
கனவில் 

நதியின் 
ஓரத்தில்
நின்று கொண்டிருக்கிறேன் 
நான்.

ஓடிக்கொண்டிருக்கும் நதி 
திடீரென 
நீயாய் 
மாறியது.

கரையின் ஓரத்தில் 
நான் 
மெல்லக் குனிந்து 
என் 
இரு கைகளாலும் 
உன்னை அள்ளுகிறேன்.

நீ 
என் கை 
இடுக்குகளின் வழியாக 
மீண்டும் நதிக்கே 
சென்று விடுகிறாய். 

மீண்டும் மீண்டும் 
அள்ளுகிறேன் 
உன்னை.

மீண்டும் மீண்டும் 
நீ 
நதிக்கே 
சென்று விடுகிறாய்.

என் கைகளை 
மெல்லப் பார்க்கிறேன்.

ஈரமாய் 
என் கைகள்.

கனவிலிருந்து
விழித்தேன்!

உன் கை விரல்களால்
என் கை விரல்களை 
பிணைத்து 
என் அருகில் நீ!

குலைப்பதும் அவள்! காப்பதும் அவள்!!

என் 
தூக்கத்தை 
கெடுக்கிறாள் 

என்னை 
தூங்க 
வைக்கிறாள் 

என் 
வேலையைச் செய்யவிடாமல்
தடுக்கிறாள் 

என்னை 
வேலை செய்ய 
வைக்கிறாள்

என் 
அமைதியை 
குலைக்கிறாள் 

என்னை 
அமைதியாய்
ஆக்கிறாள்

என் 
சிந்தனையை 
தடுக்கிறாள்

என்னைச்
சிந்திக்க 
வைக்கிறாள்

ஆம்! 
அவள் தான்!
அவளே தான்!!

அலைகளும் அவளும்

அன்றொரு நாள் 
இரவில் 
ஒரு கனவு 

ஆரவாரமான கடலில்
நாம் இருவரும் படகில் 

பலமான காற்று 
தத்தளிக்கிறது படகு 

துடுப்புகளையோ
காணவில்லை 

காற்று 
அடிக்கிறது 
படுவேகமாய்

படகு
தத்தளிக்கிறது
மேலும் கீழுமாய்

திடிக்கிட்டு
விழித்தேன்

என் 
கைதலையனை 
விடுத்து
தள்ளி
அவள்!

தூங்கும் எழில்

என் கையே 
உன்
தலையனையாய்

என் காலே
உன்
கால் மெத்தையாய்

நீ
தூங்கும் 
எழிலில்
உணர்வின்றி
போனேனே!

அவளே

காதலாய்
இருப்பது
எப்படி என்று

காற்றிடம்
கேட்டேன்

செடியிடம்
கேட்டேன்

பூவிடம்
கேட்டேன்

வண்டிடம்
கேட்டேன்

மரத்திடம்
கேட்டேன்

பறவைகளிடம்
கேட்டேன்

கிடைக்கவில்லை
விடை

அப்போது -

அவள்
வந்தாள்.

சட்டென 
கிடைத்தது
விடை

அவளே!

Monday, March 16, 2026

இப்போது புரிகிறது

புரிகிறது ...
இப்போது
புரிகிறது.

உன்னை 
ஏன் யாரும்
மறுக்க முடியவில்லை 
என்று?

புரிகிறது ...
இப்போது
புரிகிறது.

அழகான 
பொருள் பதிந்த
நேர்மையான
உறுதியான
சொற்கள்
நீ
ஏன் பேசுகிறாய்
என்று.

நீ
பேசும்
சொற்களையே
மற்றவர்கள்
பிரதிபலிப்பதால்!

கண்டதை
பயன்படுத்தினேன்
உன்னிடம்

உன்னிடம்
காதலாகி
காதலாய்
பேசினேன்!

கிடைத்தது
அதே
பிரதிபலிப்பு

எங்கள் தலைவி

குறிப்புகள்
எழுதுகிறாய்

குறிப்பிலிருந்து
வரைபடம்
வரைகிறாய்

வரைபடத்திலிருந்து
குறிக்கொள்
கொள்கிறாய்

மற்றவர்களையும்
செய்ய 
வைக்கிறாய்

என்னையையும்
அழைத்துக்
கொள்கிறாய்

வெற்றி
பெறுகிறாய்

மற்றவர்களையும்
வெற்ற பெற
வைக்கிறாய்

நீயே
எங்கள் தலைவி
எனப் போற்றினால்

புண்ணகையுடன்
மறுதலிக்கிறாய்

உன்
அறிவைப் பார்த்து
வியந்து

உன்
ஆற்றலைப் பார்த்து
வியந்து

அனைவரும் சமம் 
என்ற உன் 
கொள்கையைப் பார்த்து
வியந்து

காதலை மறந்தேன்
நான்

உன்னைப் பார்த்து

உன் கண்ணிமைகள்
முடித்திறப்பதைப் பார்த்து
மின்னும் நட்சத்திரங்கள்

உன் பேச்சுக்களைக்
கேட்டுப் பாட
எத்தனிக்கும் குயில்கள்

உன் மூச்சுக்காற்றை
உணர்ந்து தென்றலாய்
மாறும் காற்று

உன்னைப் பார்த்து
காதலன்
ஆன நான்!

மௌனத்தின் மொழி

பகலின் வெளிச்சத்தில்
மௌனத்தில் பழகலாம் 
வா!

இரவின் அமைதியில்
விடிய விடிய
மௌனத்தில் பேசலாம் 
வா!

காதலின் மொழி
என்றென்றும் 
மெளனமாய் நிலைத்திட
வா!

மௌனத்தைக் கலைப்பதும்
காதல் என்றாக்கிட
மெளனம் கலைப்போம் 
வா!

என்னுடன் மட்டும்

தாயாய்
விளங்குகிறாய் 
நீ!

தந்தையாய் 
இயங்குகிறாய் 
நீ!

சகோதரியாய்
கருணையாய்
நீ!

சகோதரனாய்
பாதுகாப்பாய்
நீ!

குழந்தையாய்
விளையாடுகிறாய் 
நீ!

ஒவ்வொருடனும்
ஒரு விதமாய் 
நீ!

ஆனால் -

என்னுடன் மட்டும்

எப்போதும்
காதலியாய்
நீ! 

நதியாய் மாறினேன்

கேள்வி
கேட்பவள்
நீ!

கேள்வி
கேட்க விடுபவள்
நீ!

சட்டங்களை
உருவாக்குபவள்
நீ!

சட்டங்களை
அழிப்பவள்
நீ!

கேள்வியாய்
கேட்டேன்
நான்

ஏன் என்று ?

பழையன
கழிதலும்
புதுயன
புகுதலும்
என்றாள்
அவள்

பழையன
நம் முன்னோர்
அறிவு என்றன்
நான்

குட்டையில் தேங்கிய
நீராய்
கெட்டுப் போய்
விடாதே!
என்றாள்
அவள்

நதியாய்
மாறிவிட்டேன்
நான்

Sunday, March 15, 2026

உயிர்மெய்

உயிரால்
உன்னை உருவகித்தேன்

மெய்யால்
உன்னை உருவகிக்கவி்ல்லை

ஏனெனில்
நீ
இல்லாமல் நான் இல்லை

உயிரோடு‍ மெய் கலந்து‍
உயிர்மெய்யாய் உருவகத்தேன்
என் உயிரே.

உன்னை உருவகிக்க
உயிரும்,
உயிர் மெய்யாய் ஆன
உன்றன் பெயர் மட்டும் போதுமே.

அனைத்து‍
உருவகங்களுக்கும்
உன் பெயரே
உணர்‌திடுமே!

மெய் உயிரோடு‍ சேர்ந்தால்தான்
மெய் அழகுரும்‍
உயிருடன்.

மெய் துடிக்கிறது‍
உயிருக்காக

மெய்யை மெய் ஆக்க
வருவாய்
என்ற நம்பிக்கையில் ...

இப்படிக்கு‍
காதலாய்
உன்றன் மெய்

நான் அவள் ஆனேன்

தூங்கிய தூக்கத்தில்
கனவில்
அவள் வந்தாள்.

என்னை
அழைத்தாள்.

விழித்தேன்.

நான்
அவள் ஆனேன்.

உன்னின் வடிவம் காதல்

எழுத்தின்
வடிவம்
உருவம்.

உன்னின்
வடிவம்
காதல்.

எல்லாம் நீ

உயிர் 
நீ!

மெய் 
நீ!

உயிர்மெய்
நீ!

ஆய்தம்
நீ!

எண்ணும்
நீ!

எழுத்தும்
நீ!

எழுத்தின் சொல்லும்
நீ!

சொல்லின் பொருள்
நீ!

மண்ணும்
நீ!

வானும்
நீ!

பண்பும்
நீ!

மாண்பும்
நீ!

எத்துனையிலும் அடங்காதவள்
நீ!

நீ
நீ மட்டுமே!

மாயக் கண்ணம்மா

எவ்விடத்திலும் 
தன்புகழைப் பாடாமல்
புகழோடு தோன்றும்
மாயவள் நீ!

வாழும் இலக்கணத்திற்கே 
வாழும் இலக்கணமாய் 
வாழ்பவள் நீ!

சூரியனுக்கே சுட்டெரிப்பதற்கு
வகுப்பு எடுத்த
சுடரொளி நீ!

நிலவுக்கே குளுமை 
பண்பினை உருவாக்கிய
குளிர்ச்சியானவள் நீ!

எப்புகழ் கேட்டாலும்
அப்புகழுக்கு ஏற்ற
எடுத்துக்காட்டு நீ!

நடமாடும் பல்கலைக்கழகம்

சொல் 
சிக்கனம் உடையவள் 
நீ!

புரியும்படி 
தெளிவாக சொல்பவள் 
நீ!

பேச்சு 
இனிமை கொண்டவள்
நீ!

நல்ல 
சொற்களையே பயன்படுத்துபவள் 
நீ!

இசைப்படக் 
சொற்களை வழங்குபவள்
நீ!

ஆழ்ந்து 
கருத்தை அளிப்பவள் 
நீ!

வரிசையை 
மாற்றாமல் தருபவள் 
நீ!

உள்ளதை 
உள்ளபடி பேசுபவள் 
நீ!

சிறந்ததை 
சிறப்பாக கொடுப்பவள் 
நீ!

புரியும் 
எடுத்துக்காட்டாய் நிற்பவள் 
நீ!

சிறந்த புத்தகத்திற்கு
நன்னூல் கூறும்
பத்து அழகை
உன்னிடத்தே கொண்டவள்
நீ!

அதனால்
நீ
நடமாடும் பல்கலைக்கழகம்

கடவுளுக்கு ஒப்பானவள்?

நீ 
கடவுளுக்கு ஒப்பானவள் 
என்றேன் நான்

நீ 
அதிசிறந்த கற்பனாவாதி 
என்றாள் அவள்

ஏன்? 
என்றேன் நான்

என்னவென்றே தெரியாத 
ஒன்றுடன் 
கண்ணுக்குத் தெரியும் 
என்னுடன் ஒப்பிடுகிறாய்!

அதனால் 
என்றாள் அவள்

இல்லை என்கிறாயா?   
கேட்டேன் நான்

இருப்பதினால் என்ன பயன் 
என்றாள் அவள் 

என்னிடம் 
பதில் இல்லை 

உங்களிடம் ...?

Saturday, March 14, 2026

மாறாத நீ

மாற்றம் 
ஒன்றே மாறாது

அதற்கு 
நீயும் 
விதிவிலக்கல்ல

நானும் 
விதிவிலக்கல்ல

யாரும் 
விதிவிலக்கல்ல

ஆனால் -

நீ 
மாறாமலே 
இருக்கிறாய்!

வியந்தேன்! 
கண்டு கொண்டேன்!!

ஆம்!
உன்னுடைய மாற்றம் 
வளர்ச்சியாக மட்டுமே!

அவளிடம் கண்ணீரா?

உன்
கண்ணில்
கண்ணீரா?

நீ
அழுகிறாயா?

ஒரு போதும்
இருக்காது

என்
கண்ணிலும்
நீர்!

ஓ!
சுற்றிலும்
புகை
மூட்டம்!

அருகிலிருக்கும் உயரம்

மற்றவர்கள் 
உன்னை 
உயரத்தில் தான்
வைத்து பார்க்கிறார்கள்

நானும் 
அவ்வாறே 

நீயும் 
உயரத்தில் 
தான் இருக்கிறாய் 

நான் 
இருக்கும் இடத்திலிருந்து 
நீ 
வெகு  உயரத்தில் 

ஆனால் 
நீ 
என்னருகே 
தான் எப்போதும்
எப்படி?

நம்ப முடியவில்லை

நீ
குழந்தையாய்
இருந்த போது ...

மனம் 
நம்ப மறுக்கிறது

நீ
குழந்தையாய்
இருந்திருப்பாய் என்று

நீ வந்திராவிட்டால்...

நீ
வந்த பின் தான்
காண்கிறேன்
சுற்றுச்சூழல்.

நீ
வந்த பின் தான்
உணர்கிறேன்
தன்உணர்வு.

நீ
வந்த பின் தான்
கேட்கிறது
சுற்றுப்புற ஒலி.

நீ
வந்த பின் தான்
அறிந்தேன்
சுவை.

நீ
வந்த பின் தான்
தெரிகிறது வீசும்
நறுமணம்.

Wednesday, March 11, 2026

ஆக்கிரமக்காரி

நீ
மெல்ல மெல்ல
என்னை
ஆக்கிரமித்தாய்!

நீ
ஆக்கிரமக்காரி!
என்றேன்
செல்லக் கோபத்துடன்.

அவள்
முறுவலித்தாள் -
பதில் தந்தாள்!

காதலுக்கு
தெரியாது
ஆக்கிரமிப்பு!

நான்
என் மனதில் 
நீ
நுழைய
அனுமதித்தேன்!

நீ
உன் மனதில் 
நான்
நுழைய
அனுமதித்தாய்!

அழகைக் கற்ற காதல்

உன்னைக் காதலிக்கும்
முன்

நீ மட்டும் தான்
அழகு
என்று இருந்தேன்

உன்னைக் காதலித்த
பின்
தெரிந்து கொண்டேன்

உலகத்தில் 
உள்ள 
எல்லாம்

அழகு
என்று!

Tuesday, March 10, 2026

நாம்

நான் -

நான்
சொல் என்றால்
நீ
எழுத்து.

நான்
கவிதை என்றால்
நீ
பொருள்.

நான்
மெய் என்றால்
நீ
உயிர்.

நான்  
நான் என்றால்
நீ.

நான்
நீ என்றால்
நான்.

அவள்  
முறுவலித்தாள்
திருத்தினாள் -

நான் என்றால்
நாம்.

நீ என்றால்
நாம்.

அவளுடைய நான்

அவளின்
காதலன் நான்
சொர்க்கம்!

அவளுடன்
நான்
சொர்க்கத்தில் சொர்க்கம்!

புன்னகையில் தோற்றேன்

கடற்கரையில்
நானும் அவளும்

அவள் -

நண்டு நடப்பதை
ரசிக்கிறாள்!

கறையோர சிப்பிகளை
ரசிக்கிறாள்!

மிதக்கும் படகுகளை
ரசிக்கிறாள்!

அடிக்கும் அலைகளை
ரசிக்கிறாள்!

கால் தடங்களை
ரசிக்கிறாள்!

நான் சொன்னேன்
காட்சி ஒவ்வொன்றையும்
ரசிக்கும்
உன்னையே
ரசிக்கும்
நானே
மாபெரும் ரசிகன்
என்று

மெல்லப் புண்ணகை
பூத்தாள்
நான் தோற்றே
போனேன்!

Monday, March 9, 2026

என்னை என்னையாகப் பார்

அவளிடம்
நீ பேசுவதே
குயில் பாடுவது
போல்
இனிமையாய் உள்ளது
என்றேன்.

அவள்
எள்ளலாய் 
சிரித்துக் கொண்டே

குயிலை 
குயிலாய் 
ரசி!

என்னை
என்னையாக 
பார்!
என்று.

Sunday, March 8, 2026

உள்ளத்தில் அவள்

நாளை
உன்னைக் காண
வரமாட்டேன் என்றாய்!

நீ
வரும் வரை
நான்
என் கண் இமைகளை
திறக்கமாட்டேன்
என்றேன்

ஏன்?
என்றாய்

உன்
பிம்பத்தை
வைத்துக் கொள்ள
என்றேன்

புண்னகைத்தே
நீ
சொன்னாய்
உன்
மனதைப் பார் 

பெண்

நெற்றிப் பொட்டு 
விலக்கினாய்!

கை வளையல் 
கலைந்தாய்!

நீண்ட சடை 
நீக்கினாய்!

சின்னங்கள் வழி
அடிமை நீக்க

முன்மாதிரியாய்
திகழ்கிறாய்!

உயிர்மெய்

உன் மெய்
காண
என் உயிர்
மறந்தேன்!

உன் உயிர்
பற்றி
என் மெய்
உணர்ந்தேன்!

Saturday, March 7, 2026

உன் உள் தேடு

ஏழு கடலிலும்
அவளைத்
தேடினேன்!

ஏழு மலையிலும்
அவளைத்
தேடினேன்!

தேடினேன்!
இடம் பல என்று

எங்கும் 
காணவில்லை
அவள்

சோர்ந்தேன்

என் நிலை
கண்டு சொன்னாள்
உன் உள் தேடு
என்றாள்!

தூக்கத்தை திருடியவள்

என்னைத் 
திருடிச் சென்றது 
மட்டும் இல்லாமல் 
என்
தூக்கத்தையும்
கவர்ந்து 
சென்றாள்!

Friday, March 6, 2026

நீயே தமிழ்!

அறமாய் இருக்கிறாய்
அதனால் நீ 
வெண்பா!

தலைமையாய் இருக்கிறாய்
அதனால் நீ 
ஆசிரியப்பா!

உணர்வுடன் இருக்கிறாய்
அதனால் நீ 
கலிப்பா!

இனிமையாக பேசுகிறாய்
அதனால் நீ 
வஞ்சிப்பா!

பலவும் கலந்து இருக்கிறாய்
அதனால் நீ
மருட்பா!

மொத்தத்தில்
நீ
தமிழ்!

நீ = காதல்

வினையாலணையும் பெயர் 
ஒன்று சொல் என்றாய்
காதலி
என்றேன்..!

உருவகம்
எடுத்துக்காட்டு தா என்றாய்
காதல்
என்றேன்!

தொழில் பெயர்
கூறு என்றாய்
காதலித்தல்
என்றேன்!

வினை
விளக்கம் சொல் என்றால்
காதல் 
என்றேன்!

காதல்
எடுத்துக் காட்டு தா என்றாய்
அமைதியாய்
நீ
என்றேன்!

அடைமொழியே நீ!

சிறந்த செயல் 
என்கிறேன்
செயல் 
என்கிறாய்!

இனிமையான பாடல் 
என்கிறேன்
பாடல் 
என்கிறாய்!

அழகிய பெண் 
என்கிறேன்
பெண் 
என்கிறாய்!

கனிந்த பழம் 
என்கிறேன்
பழம் 
என்கிறாய்!

நீ
என்றேன்
சொல் இன்றி
நின்றுவிட்டாய்!

நீ
அடைமொழி இல்லா -

சிறப்பு 
நீ!

இனிமை 
நீ!

அழகு
நீ!

கனிவு 
நீ!

அது நானே அல்ல

அவளிடம் கேட்டேன் -

என் நினைவுகளை
நீ மறந்து விட்டால்
எப்படி இருப்பாய் என்று?

அவள் 
சட்டென்று  சொன்னாள் -

அது நானே 
அல்ல!

நிறை நீ

உன்னிடம்
இல்லாத ஒன்று

மற்றவர்களிடம்
இருப்பது -

மொழியில் கூட
வழு உண்டு

தங்கத்தில் கூட
குறை உண்டு

வைரத்தில் கூட
பழிப்பு உண்டு

மனிதர்களில் கூட
குற்றம் உண்டு

ஆனால்
உன்னிடத்தில்
குற்றமில்லை
குறையில்லை

நிறை மட்டும்
நீ!

வினை நீ!

வினை இல்லா
வினை செய்பவள்
நீ!

வினைத் தொகை 
கற்றேன்
உன்னாலே!

நேற்று
நீயாக
இருந்தாய்!

இன்று
நீயாக 
இருக்கிறாய்!

நாளையும்
நீயாகவே
இருப்பாய்!

Thursday, March 5, 2026

நீயே புதிர்! நீயே விடை!

உன்னை அறியாதவர்களுக்கு 
புதிர் 
நீ!

உன்னை அறிந்தவர்களுக்கு 
விளக்கம்
நீ!

உன்னை அறியாதவர்களுக்கு 
கேள்வி
நீ!

உன்னை அறிந்தவர்களுக்கு 
பதில்
நீ!

அறியாதவர்களையும்
அறிய வைப்பவள்
நீ!

பதில் இல்லா கேள்விக்கும்
விடை
நீ!

மொத்தத்தில் -

புதிராய் பார்பவர்களுக்குப்
புதிராய்

விடையாய் பார்பவர்களுக்குப்
விடையாய்

இருப்பவள்
நீ!


புதிர் அல்ல நீ!

உருகாத

குளுமை 
நீ

சுடாத
வெம்மை
நீ

வளையும்
கடினம்
நீ

செருக்கில்லா
உயரம்
நீ

நகலில்லா
உண்மை
நீ 

மெதுவாய் வென்றாய்

மெதுவாக
நடக்கிறாய்!

மெதுவாக
சாப்பிடுகிறாய்!

மெதுவாக
குடிக்கிறாய்!

மெதுவாக
பேசுகிறாய்!

மெதுவாக
இருக்கிறாய்!

ஆனால் -

உன் அழகால்
வேகமாய்
என்னை 
ஈர்த்தாய்!

உன் அறிவால்
வேகமாய்
என்னைக்
கவர்ந்தாய்!!

உன்னில் கண்டேன் உண்மையை

அகத்தின்
அழகு
முகத்தில் தெரியும்
என்பதை
உன்னிடம் தான் 
கண்டு உணர்ந்தேன்

கண்டேன் 
உன்றன் உள்ளத்தின் அழகை

கண்டேன் 
உன்றன் எழில் அழகை

Monday, March 2, 2026

நான் அல்ல, நீயே

உன்னைத்
தாலாட்டு பாடி 
தூங்க வைக்க முயல்கிறேன்
ஆனால்
உன்
பேச்சைக் கேட்டு
நான்
தூங்கிப் போகிறேன்!

உன்னைக்
காலையில் துயில்
எழுப்ப நினைக்கிறேன்
ஆனால்
உன்
தூங்கும் எழிலைப் பார்த்து
நான்
தூங்கிப் போகிறேன்!

ஆனால்
நீயோ -

நீ 
நினைத்ததை 
நீயே
நிறைவேற்றிக் கொள்கிறாய்.

Sunday, March 1, 2026

நீயே இலக்கணம்

வரையறைகள் இல்லா 
ஒழுங்கு
நீ
மற்றவர்களுக்கு 
இலக்கணமாய் இருக்கிறாய்

கரைகள் இல்லா 
நதி 
நீ
மற்றவர்களுக்கு
பாதுகாப்பாய் இருக்கிறாய்

வரலாறு காணாத 
வரலாறு
நீ
மற்றவர்களுக்கு
மாற்றங்களாய் இருக்கிறாய்

நனவுக்கான கனவு

கனவுகளை
நினைவாக்கிறாய்

நினைவாக்குவதற்காகவே

கனவுகள்
காண்கிறாய்

நீயே என் பாடம்

கதைகள்
சொல்கிறாய்

கவிதைகள்
எழுதுகிறாய்

மேடைகளில்
பேசுகிறாய்

அனைத்திலும் -

உன் கருத்துகளை
முன்வைக்கிறாய்

யாரையும் எதிர்க்காமல்.
யாரையும் புண்படுத்தாமல்.


நீயே 
என் பாடம்
நீயே 
என் படிப்பு

எதைக் கற்க?

அன்பாய்
பிறக்கும் போதே

பண்பாய்
பிறக்கும் போதே

அறிவாய்
பிறக்கும் போதே

நிறைவாய்
பிறக்கும் போதே

பின் -

எதைக் கற்க
பள்ளிக்கூடம் போனாய்!

வாழ்வே காதல்

ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு மணிநேரமும்
ஒவ்வொரு நாளும்
நினைத்தலில் அல்ல
காதல்

ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு மணிநேரமும்
ஒவ்வொரு நாளும்
வாழ்வதலில் தான்
காதல்

என
வாழ வைத்தாய்

வாழ்வில் தான்
காதல்
என

காதலை
காதலிக்க வைத்தாய்

அகராதி நீ

அன்பு நீ
அறிவு நீ
இயல்பு நீ
ஈகை நீ
உயிர் நீ
ஊக்கம் நீ
என்றுமே நீ
ஏவுபவள் நீ
ஐயமில்லா நீ
ஒவ்வொன்றும் நீ
ஓவியம் நீ
ஒளவியம் நீ

வல்லினம் + ஃ = மெல்லினம்

வல்லினமாய்
நீ

ஆயுதமாய் 

ஃ 
இணைத்தாய்

மெல்லினமாய்
நீ!