"கவிஞனா?"
அவள்.
"இல்லை"
நான்.
"கவிதைகள் எழுதுகிறாயே"
அவள்.
"கவிதை
எழுதுபவர்கள்
எல்லாம் கவிஞர்களா?"
நான்.
"இருக்கட்டும்...
என்னைப்
பற்றி கவிதை
எழுது."
அவள்.
"முடியாது"
நான்.
"ஏன்?"
அவள்.
"என்
சொற்கள்
எல்லாம்
நீயாகி விட்டன."
நான்.
அவள்
செல்லமாய்
என் கண்ணத்தில்
முத்தமிட்டுச்
சென்றாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக