யாரோ சிலரை எழுப்ப
ஊரையே எழுப்பும்
பள்ளிவாசல்கள்.
கடவுளை எழுப்புவதாகச் சொல்லி
மக்களின் தூக்கத்தை கலைக்கும்
சுப்ரபாதங்கள்.
காலையைக் கொண்டு வருவதாக
மணியோசையில்
அமைதியை உடைக்கும்
சர்ச்சுகள்.
காக்கும் பெயரில்
கவசங்கள் பாடி
காதுகளை கிழிக்கும்
கோயில்கள்.
போதனை என்ற போர்வையில்
உருக்கே உபதேசம் சிந்தும்
பள்ளிவாசல்கள்.
ஏன் அடிக்கிறோம் என்று தெரியாமல்
மணியைத் துரத்திக் கொண்டே இருக்கும்
கோயில்கள்.
பொது இடம் என்பதைக்
தனதாக்கிக் கொள்ளும்
வழித்தட பிள்ளையார்கள்.
விதிமீறல்களே
எங்கள் வழக்கம் என
ஒலியும் ஒளியும் கூட்டி
மக்களின் நிம்மதியை
நெருக்கும்
வழிபாட்டு தலங்கள்.
அப்படியானால்...
ஆம்!
நான் வாழ்வது
நரகத்தில்தான்.
நரகம் இருக்கிறது.
அதனால் -
இருக்கிறார்
கடவுள்.
No comments:
Post a Comment