Sunday, March 8, 2026

உள்ளத்தில் அவள்

நாளை
உன்னைக் காண
வரமாட்டேன் என்றாய்!

நீ
வரும் வரை
நான்
என் கண் இமைகளை
திறக்கமாட்டேன்
என்றேன்

ஏன்?
என்றாய்

உன்
பிம்பத்தை
வைத்துக் கொள்ள
என்றேன்

புண்னகைத்தே
நீ
சொன்னாய்
உன்
மனதைப் பார் 

No comments:

Post a Comment