காலில்
கைகளில்
பல நிறங்களில்
கயிறுகள் கட்டினால்
இல்லா
பேய்கள்
பிசாசுகள்
அண்டாது...
தூங்கும்
நேரத்தில்
தூங்காது
விழித்தெழுந்து
விளக்கெற்றினால்
உழைக்காமலே
செல்வம் வந்து சேரும்...
இன்ன நாளில்
இன்ன நேரத்தில்
முன்னோரை வழிபட்டால்
அவர்கள்
சொர்கம் செல்வர்
என ஒவ்வொரு ஆண்டும்
வழிபடச் செய்வித்து ...
இன்ன பல
அறிவுக்குப் புறம்பான
'நம்பிக்கை'களை
இட்டுக் கட்டி
அறிவை அல்ல -
மூட நம்பிக்கைகளையே
வளர்க்கும்
மதங்கள்.
No comments:
Post a Comment