Friday, March 27, 2026

பயத்தை விதைக்கும் மதங்கள்

காலில்
கைகளில்
பல நிறங்களில்
கயிறுகள் கட்டினால்

இல்லா
பேய்கள்
பிசாசுகள்
அண்டாது...

தூங்கும் 
நேரத்தில்
தூங்காது
விழித்தெழுந்து
விளக்கெற்றினால்
உழைக்காமலே
செல்வம் வந்து சேரும்...

இன்ன நாளில்
இன்ன நேரத்தில்
முன்னோரை வழிபட்டால்
 அவர்கள் 
சொர்கம் செல்வர்
என ஒவ்வொரு ஆண்டும்
வழிபடச் செய்வித்து ...

இன்ன பல
அறிவுக்குப் புறம்பான
'நம்பிக்கை'களை
இட்டுக் கட்டி

அறிவை அல்ல -

மூட நம்பிக்கைகளையே
வளர்க்கும்
மதங்கள்.

No comments:

Post a Comment