ஒரு வழிப் பாதையில்
எதிர் வரும்
வாகன ஓட்டிகள் -
ரோடு
தங்களுக்கே
என ஆக்கிரமிக்கும்
'இனியவர்கள்
சாதி
மதம்
வக்கீல்
ஸ்டிக்கர்கள்
ஒட்டி மிரட்டும்
'நண்பர்கள்'
சட்டமோ
விதிமுறையோ
நல்லெண்ணமோ
மற்றவர்கள் மதிப்போ
இல்லாத
'மனிதர்கள்'
அதிலும்
செல்போனுடன்
'நேரத்தை வீணாக்காதவர்கள்'
சிந்தித்தேன் -
இவர்கள்...
ரோட்டின்
'வீர தீர புலிகள்'
சட்டம்...
புத்தகத்தில்
மட்டுமே இருக்கும்.
No comments:
Post a Comment