நீ
கடவுளுக்கு ஒப்பானவள்
என்றேன் நான்
நீ
அதிசிறந்த கற்பனாவாதி
என்றாள் அவள்
ஏன்?
என்றேன் நான்
என்னவென்றே தெரியாத
ஒன்றுடன்
கண்ணுக்குத் தெரியும்
என்னுடன் ஒப்பிடுகிறாய்!
அதனால்
என்றாள் அவள்
இல்லை என்கிறாயா?
கேட்டேன் நான்
இருப்பதினால் என்ன பயன்
என்றாள் அவள்
என்னிடம்
பதில் இல்லை
உங்களிடம் ...?
No comments:
Post a Comment