நம் ஊரில்
பல்வேறு
தெய்வங்கள்
பல்வேறு
தெய்வங்களுக்கும்
பற்பல
கோயில்கள்
பற்பல
வழிப்பாட்டு
முறைகள்
பக்தர்கள்
எனப் பெயர் கொண்டு
பக்தி என்ற
குறிக்கொள் மறந்து
நானே
பெரியவன்
என் பெயரை
நிலைநாட்டுவேன்
என
ஊர் அதிர
ஒலிபெருக்கி அமைத்து
அத் தெய்வ
வழிப்பாட்டு முறை
விட்டு விலகி
ஏதேதோ
தெய்வகளின் பாடல் -
வரிசை கூட தெரியாமல்
சத்தம்
ஒன்றே குறிக்கொளாய்
பூடம் தெரியாமல்
சாமியாடும்
ஒலிபெருக்கி
பக்த'சாமிகள்'.
No comments:
Post a Comment