எவ்விடத்திலும்
தன்புகழைப் பாடாமல்
புகழோடு தோன்றும்
மாயவள் நீ!
வாழும் இலக்கணத்திற்கே
வாழும் இலக்கணமாய்
வாழ்பவள் நீ!
சூரியனுக்கே சுட்டெரிப்பதற்கு
வகுப்பு எடுத்த
சுடரொளி நீ!
நிலவுக்கே குளுமை
பண்பினை உருவாக்கிய
குளிர்ச்சியானவள் நீ!
எப்புகழ் கேட்டாலும்
அப்புகழுக்கு ஏற்ற
எடுத்துக்காட்டு நீ!
No comments:
Post a Comment