Sunday, March 15, 2026

மாயக் கண்ணம்மா

எவ்விடத்திலும் 
தன்புகழைப் பாடாமல்
புகழோடு தோன்றும்
மாயவள் நீ!

வாழும் இலக்கணத்திற்கே 
வாழும் இலக்கணமாய் 
வாழ்பவள் நீ!

சூரியனுக்கே சுட்டெரிப்பதற்கு
வகுப்பு எடுத்த
சுடரொளி நீ!

நிலவுக்கே குளுமை 
பண்பினை உருவாக்கிய
குளிர்ச்சியானவள் நீ!

எப்புகழ் கேட்டாலும்
அப்புகழுக்கு ஏற்ற
எடுத்துக்காட்டு நீ!

No comments:

Post a Comment