வியாழன், 19 மார்ச், 2026

பார்வை ≠ உண்மை

"நீ
மிகப் மிகப்
பெரியவள்".

"சரி"
அவள்.

"தலைக்கனம்?"

"இதில் என்ன
தலைக்கனம்?"
அவள்.

"நீ
மிகப் மிகப்
பெரியவள் என்று 
நம்புகிறாய் அல்லவா!"
நான்.

"நீ
மிகப் மிகப்
பெரியவள் 
என்னைப் பற்றி
உன் கருத்து.

நீ
கருத்து சொன்னாய்
அந்தக்
கருத்தைக் கேட்டுக் கொண்டேன்
அவ்வளவே"
அவள்

"புரியவில்லை"
நான்.

"யார் என்றாலும்
யார் பற்றியும்
கருத்து கூறலாம்

அது
உண்மையா?
பொய்யா?
என ஏன்
ஆராய வேண்டும்"
அவள்.

திகைப்பில்
வியப்பில்
நான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக