அன்று
ஒரு நாள்
கனவில்
நதியின்
ஓரத்தில்
நின்று கொண்டிருக்கிறேன்
நான்.
ஓடிக்கொண்டிருக்கும் நதி
திடீரென
நீயாய்
மாறியது.
கரையின் ஓரத்தில்
நான்
மெல்லக் குனிந்து
என்
இரு கைகளாலும்
உன்னை அள்ளுகிறேன்.
நீ
என் கை
இடுக்குகளின் வழியாக
மீண்டும் நதிக்கே
சென்று விடுகிறாய்.
மீண்டும் மீண்டும்
அள்ளுகிறேன்
உன்னை.
மீண்டும் மீண்டும்
நீ
நதிக்கே
சென்று விடுகிறாய்.
என் கைகளை
மெல்லப் பார்க்கிறேன்.
ஈரமாய்
என் கைகள்.
கனவிலிருந்து
விழித்தேன்!
உன் கை விரல்களால்
என் கை விரல்களை
பிணைத்து
என் அருகில் நீ!
No comments:
Post a Comment