"உன்னை
வரையப் போகிறேன்"
அவள்.
ஆசையாய்
தலையாட்டினேன்.
என்னை -
நிற்க வைத்தாள்.
ஓவியப் பலகையில்
வரைய ஆரம்பித்தாள்...
"முடிந்தது
பார்க்க வா!"
அவள்.
சென்றேன்.
பார்த்தால்
வெறும்
வெள்ளை தாள் ...
ஓவியம்
ஏதுமின்றி.
என்ன இது?
என்ற
முக அசைப்பில்
அவளைப் பார்த்தேன்.
அவள்
சலனமின்றி -
"நீ
எல்லையற்றவன்
தாளுக்குள்
அடங்கவில்லை
நீ
வெள்ளை மனம்
படைத்தவன்
வண்ணங்கள்
ஏதுமில்லை"
என்று சொல்லி
கலகலவென
பலமாகச்
சிரிந்தாள்.
அந்தச்
சிரிப்பில்
நான்
...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக