Monday, March 16, 2026

நதியாய் மாறினேன்

கேள்வி
கேட்பவள்
நீ!

கேள்வி
கேட்க விடுபவள்
நீ!

சட்டங்களை
உருவாக்குபவள்
நீ!

சட்டங்களை
அழிப்பவள்
நீ!

கேள்வியாய்
கேட்டேன்
நான்

ஏன் என்று ?

பழையன
கழிதலும்
புதுயன
புகுதலும்
என்றாள்
அவள்

பழையன
நம் முன்னோர்
அறிவு என்றன்
நான்

குட்டையில் தேங்கிய
நீராய்
கெட்டுப் போய்
விடாதே!
என்றாள்
அவள்

நதியாய்
மாறிவிட்டேன்
நான்

No comments:

Post a Comment