ஒரே நாடு
ஒரே மொழி
ஒரே தெய்வம்
ஒரே தேர்தல்
ஒரே தலைவன்
எனக் கோஷமிடுவோர்களிடம்
மக்கள் எல்லாம்
ஒரே நிரை
என்று மட்டும்
ஏற்றுக்கொள்ள
மறுப்பது ஏன்?
என்று நான் கேட்க
எங்கள்
வேதம்
சொல்கிறது ...
பிறப்பால்
நாங்கள்
உயர்ந்தவர்கள் !
முற்பிறவி
கர்மாவால்
நீங்கள்
எங்களுக்கு
ஈடாக மாட்டீர்கள்!
என
மாற்றிப் பேசும்
சந்தர்ப்பவாதிகள்!
இவர்கள்
சமத்துவம் -
தெரிவு செய்த
இடங்களில் மட்டுமே!
No comments:
Post a Comment