கடற்கரை மணல் கூட
உன் கால்தடம்
பதியாதவாறு
உன் மெல்லிய பாதத்தைப்
தாங்கிக் கொள்கிறது.
காற்று கூட
நீ மூச்சு விட
சிரமப்படாவண்ணம்
அதுவே உள் சென்று
மென்மையாய் வெளியேறுகிறது.
இந்த பூமி
நீ நடந்து
உன் கால்கள் வலிக்காதபடி
தானே சுற்றி
நீ செல்லும் இடத்தை
உன் காலடிக்கு
கொண்டு வருகிறது.
No comments:
Post a Comment